திருமண நாளில் கணவனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க முயன்ற இளம்பெண் பரிதாப பலி!

  • IndiaGlitz, [Saturday,February 08 2020]

வேலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கும் வினிசைலா என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தையும் இருக்கிறார். இந்த நிலையில் நேற்று முதலாம் ஆண்டு திருமண நாள் என்பதால் அதை கொண்டாட முடிவு செய்து இருவரும் தங்களது உறவினர்களுடன் பாலவாக்கம் கடற்கரைக்குச் சென்றனர்

நள்ளிரவு சரியாக 12 மணிக்கு ஒருவரை ஒருவர் மோதிரம் மாற்றிக் கொள்ள திட்டமிட்டிருந்தனர். அதற்காக அவர்கள் 11.50 மணிக்கே பீச்சில் இருவரும் உட்கார்ந்து 12 மணிக்கு காத்திருந்தனர். அலைகள் அந்நேரம் அவளுடைய கால்களை நனைத்து கொண்டு ரம்மியமாக இருந்தது

இந்த நிலையில் சரியாக 12 மணிக்கு வினிசைலா மோதிரத்தை எடுத்து தனது கணவருக்கு மாற்ற முயலும் போது திடீரென ஒரு ராட்சச அலை வந்து இருவரையும் அடித்து சென்றது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அலறியதால் அங்கிருந்த மீனவர்கள் உடனடியாக கடலில் இறங்கி இருவரையும் மீட்க முயற்சித்தனர். ஆனால் அவர்களால் விக்னேஷை மட்டுமே மீட்க முடிந்தது. மறுநாள் காலையில் பிணமாக வினிசைலா கரை ஒதுங்கினார்

முதலாவது திருமண நாளை கணவருடன் ஆசை ஆசையாய் கொண்டாட சென்ற வினிசைலா பிணமாக திரும்பியது அந்த பகுதியில் உள்ளவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது
 

More News

காப்பாத்தலாம்னு வந்தா சிலம்பரசன் மாதிரியா பேசுற: யோகிபாபுவின் ட்ரிப் டீசர்

தமிழ் திரையுலகின் காமெடி நடிகராக மட்டுமின்றி ஒருசில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வரும் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்த இன்னொரு திரைப்படம் ட்ரிப். இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது 

உடலுக்கு நல்லது என கூறிய Facebook வீடியோ பார்த்து, ஜூஸ் போட்டு குடித்த இளைஞர் பலி.

ஒரு நாள் பேஸ்புக் பார்த்து கொண்டிருந்த போது அதில் கஜ மாடரா என்ற மரத்தின் இலைகளை பரிந்து அதை ஜூஸ் போட்டு குடித்தால் உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும் என ஒரு வீடியோவை பார்த்துள்ளார்.

மணப்பெண்ணின் சேலை பிடிக்கவில்லை என திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை வீட்டார்.!

சேலை பிடிக்காததற்காக திருமணத்தை நிறுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் கருணை மனுவினைக் குறித்து ஆளுநர் சுதந்திரமாக முடிவு எடுக்கலாம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளான பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் கருணை மனுவைக் குறித்து தமிழக ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம்

நெய்வேலியில் விஜய் ரசிகர்கள் மீது தடியடி: பெரும் பரபரப்பு

நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் விஜய்யின் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெற்று வரும் இடம் அருகே பாஜகவினர் இன்று மாலை திடீரென குவிந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது