33வது பிறந்த நாளை கொண்டாடிய 'கில்லி' தங்கை நடிகை.. திருமணம் செய்யாததற்கு கூறிய காரணம்..!

  • IndiaGlitz, [Wednesday,April 26 2023]

தளபதி விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்த நடிகை ஜெனிபர் தனது 33 வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடிய நிலையில் அது குறித்த வீடியோவையும் பதிவு செய்துள்ளார்.

தளபதி விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஜெனிபர். ‘கில்லி’ படத்திற்கு முன்பும் சரி அதற்கு பின்பும் சரி பல திரைப்படங்களில் ஜெனிஃபர். நடித்திருந்தாலும் ‘கில்லி’ படம் மட்டும் இன்னும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படங்களில் மட்டுமின்றி ஒரு சில சின்னத்திரை தொடர்களில் இவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில் 33 வயதாகும் ஜெனிஃபர். சமீபத்தில் தனது பிறந்த நாளை தனியாக கேக் வெட்டி கொண்டாடினார். ஜெனிபர் இன்னும் திருமணம் செய்யாமல் இருப்பது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளார். அதில், ‘என்னுடைய 33வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறேன், எனக்கு திருமணம் ஆகவில்லை, குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை, என்னுடைய வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை முடிவு செய்வது நான்தான், எனது விருப்பம் போல என்னுடைய வாழ்க்கை வாழ்ந்து கொள்கிறேன், என்னைப் பற்றி விமர்சனம் செய்பவர்கள் குறித்து எனக்கு கவலை இல்லை’ என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

More News

'கபாலி' படத்தை ரீ-ரிலீஸ் செய்ய தாணு திட்டம்.. முக்கிய காட்சிகள் மாற்றப்படுகிறதா? 

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவான 'கபாலி' திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வெற்றி பெற்றது.

பள்ளி மாணவராக கலக்கும் அசோக் செல்வன்.. 'சபா நாயகன்' டீசர்..!

 நடிகர் அசோக் செல்வன் பள்ளி மாணவராக நடித்திருக்கும் 'சபா நாயகன்' என்ற திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ள நிலையில் இந்த டீசர் வீடியோ வைரல் ஆகி வருகிறது 

சினிமாவை விட்டு போனதற்கான உண்மையான காரணம் .... அபிராமி

சினிமாவில் புகழ் பெற்ற கதாநாயகியாக வலம் வந்தவர் அபிராமி. புகழின் உச்சியில் இருக்கும் போதே அவர் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

கமல்ஹாசன் படத்தில் நடிக்க மறுத்தது ஏன்? 'PS 2' புரமோஷன் விழாவில் விக்ரம் விளக்கம்..!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் வெள்ளி என்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு

திவ்யா துரைசாமியின் அடுத்த சம்பவம்.. ரம்யா பாண்டியன் ஸ்டைலில் போட்டோஷூட்..!

நடிகை ரம்யா பாண்டியன் ஒரே ஒரு இடுப்பழகு போட்டோஷூட் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமான நிலையில் அதே பாணியில் நடிகை திவ்யா துரைசாமியின் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.