ரியல் ஹீரோக்களிடம் ஆட்டோகிராப் வாங்குங்கள்: சூரி வேண்டுகோள்

இன்றைய நிலைகளில் ரியல் ஹீரோக்கள் காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் தான். எனவே அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்கி அவர்களை கெளரவப்படுத்துங்கள் என நடிகர் சூரி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது:

கடந்த இரண்டு நாளைக்கு முன்னதாக என் மகளுடன் படிக்கும் பாப்பா ஒருவர் என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டார். அதற்கு நான், கொரோனா நேரத்தில் புகைப்படம் வேண்டாம் என்றும் கொரோனா முடிந்தவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறினேன். அதற்கு அந்த பாப்பா ’ஆட்டோகிராப் போட்டுக் கொடுங்கள் என்று கூறினார். கண்டிப்பாக போட்டுத் தருகிறேன் என்று கூறி விட்டு ’உங்கள் அப்பா என்ன வேலை செய்கிறார்’ என்று கேட்டேன். அதற்கு அந்த பாப்பா காவல்துறையில் பணி புரிவதாகவும் கூறினார்

உடனே நான் ’நீ ஆட்டோகிராப் முதலில் வாங்க வேண்டியது என்னிடம் அல்ல, உன் தந்தையிடம் என்று கூறினேன். இந்த கொரோனா காலத்தில் ரியல் ஹீரோவாக இருப்பவர்கள் அவர்கள்தான். காவல்துறையினர்கள், மருத்துவர்கள், நர்ஸ்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் தியாக மனப்பான்மையுடன் பணிபுரிந்து வருகிறார்கள், அவர்களுக்கு நன்றி என்ற வார்த்தை பத்தாது, எனவே அவர்களை கவுரவப்படுத்த அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்கி சமூக வலைதளங்களில் வெளியிடுங்கள். இதுவே மிகப்பெரிய கவுரவமாக அவர்களுக்கு இருக்கும் என்று கருதுகிறேன். உங்களால் முடிந்தால் இதனை செய்யுங்கள் என்று சூரி ரசிகர்களுக்கு வேண்டுகோளாக கூறியுள்ளார்

அதுமட்டுமின்றி சூரி கடந்த இரண்டு நாட்களில் காவல்துறையினர்கள், மருத்துவர்கள், நர்ஸ்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியவர்களிடம் சமூக இடைவெளியை கடைபிடித்து ஆட்டோகிராப் வாங்கி அதையும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

ஊரடங்கு விடுமுறையில் தமிழ் கற்கும் பிரபல பாலிவுட் நடிகை!

பிரபல பாலிவுட் நடிகைகள் பலர் தமிழ் திரையுலகில் பிசியாக நடித்து வரும் நிலையில், மொழி தெரியாமல் சில நடிகைகள் கஷ்டப்படுவது உண்டு. அந்த வகையில் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில்

'பாகுபலி' ரானாவை காதலிக்கும் பெண் தொழிலதிபர் இவர்தான்

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' திரைப்படங்களில் வில்லனாக நடித்திருந்த ராணா டகுபதி கடந்த சில ஆண்டுகளாக பெண் தொழிலதிபர் ஒருவரை

ரஜினியின் 'அண்ணாத்த' ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வமாக அறிவித்த சன்பிக்சர்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.

ஒரு வருடத்திற்கு இனி தியேட்டரின் நிலை இதுதான்: பிரபல தயாரிப்பாளர்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் வரும் 17ஆம் தேதி ஊரடங்கு வாபஸ் பெற்றாலும் அதன் பின்னரும் திரையரங்குகள் திறப்பது சந்தேகமே என்று கூறப்படுகிறது.

ப்ளாரான்ஸ் நைட்டிங்கேல் பிறந்து 200 ஆண்டுகளை கடந்துவிட்டது!!! இன்றும் தேவைப்படுகிறார் ஏன்???

ஒரு பெரும்நோய்த்தொற்று பரவலின் போது வெறுமனே மருத்துவர்கள் மட்டும் இருந்தால் போதாது