உங்களை ஏமாத்திக்கிட்டே இருக்காங்க! காயத்ரியிடம் கண்ணீர் விட்ட ஓவியா

  • IndiaGlitz, [Wednesday,July 26 2017]

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முடிவில் காயத்ரி மற்றும் ஓவியா இருவரும் பிக்பாஸ் வீட்டில் உள்ள கன்பெஃக்ஷன் அறைக்கு சென்று பிக்பாஸ் அறிவுரையின்படி சமாதானம் ஆனார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன் ஒரு புரமோவீடியோ வெளியாகியுள்ளது.

அதில் காயத்ரி வெளியில இருக்குற ஓவியா வேற மாதிரி இருந்தாங்க, பிக்பாஸ் வீட்டுல இருக்குற ஓவியா வேற மாதிரி இருக்காங்க, எதை நான் நம்புவது என்று கேட்க, அதற்கு ஓவியா, 'நீங்கள் காதால் கேட்கும் எதையும் நம்பாதீங்க, நீங்க கண்ணால் எதை பார்க்கின்றீர்களோ அதை நம்புங்கள். பர்சனலாக எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். என்னால உங்களுக்கு கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது என்றுதான் உண்மையில் நான் நினைத்தேன். உங்களை ஏமாத்திக்கொண்டே இருக்கின்றார்கள். இதை நீங்கள் ஏன் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் என் வருத்தம்' என்று கூறி கண்ணீர் வடித்தார்.

அப்போது காயத்ரியும் நெகிழ்ச்சி அடைந்து ஓவியாவை கட்டிப்பிடிது அழாதே என்று ஆறுதல் கூறினார். இதுவரை எதிரும் புதிருமாக இருந்த ஓவியா, காயத்ரி தற்போது ஒன்று சேர்ந்துவிட்டால், காயத்ரியை நம்பி ஆட்டம் போட்ட ஜூலியின் நிலை என்ன? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

உனக்கு இதயமே இல்லையா? அலட்சியப்படுத்திய ஜூலிக்கு அட்வைஸ் செய்த ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு நாளுக்கு நாள் எப்படி ஆதரவு அதிகரித்து வருகிறதோ அதேபோல் ஜூலி மீது நாளுக்கு நாள் வெறுப்பும் அதிகரித்து வருகிறது...

ஓவியாவை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்ட காயத்ரி! ஜூலியின் நிலை என்ன?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களிடையே ஏற்படும் பிரச்சனைகளுக்கு பெரும்பாலும் ஜூலி அல்லது காயத்ரி தான் காரணமாக இருக்கின்றார்கள் என்பது இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு தெரியும்...

ஃபெப்சியில் இல்லாதவர்களை கொண்டும் வேலை செய்யலாம்: தயாரிப்பாளர் சங்கத்தின் அதிரடி அறிக்கை

கோலிவுட் திரையுலகில் கடந்த சில வருடங்களாகவே தயாரிப்பாளர்களுக்கும் ஃபெப்சி ஊழியர்களுக்கும் இடையே சம்பள பிரச்சனை இருந்து வருகிறது. இந்த பிரச்ச்னை பல சமயங்களில் முற்றி, படப்பிடிப்பையே நிறுத்தும் அளவுக்கு இருந்து வருகிறது...

கீர்த்திசுரேஷை தேர்வு செய்தது ஏன்? விக்னேஷ் சிவன் விளக்கம்

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் முடிவடையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது...

வைகோவை விமர்சித்தாரா ரோபோசங்கர்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறித்து நகைச்சுவை நடிகர் ரோபோசங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததாக நேற்றும் இன்று டுவிட்டர் இணணயதளத்தில் செய்தி பரவி வருகிறது