நீங்கள் எல்லாம் ஆட்டு மந்தைகள்: காயத்ரி ரகுராமின் சர்ச்சை டுவீட்

  • IndiaGlitz, [Thursday,April 12 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களில் ஒருவரான காயத்ரி ரகுராம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் பெண்ணான தன்னை தமிழ் மக்கள் ஆதரிக்காமல் கேரள பெண்ணான ஓவியாவை ஆதரவு கொடுத்தது குறித்து சர்ச்சைக்குரிய டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நான் தமிழ் பெண்ணாக இருந்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் என்னை ஆதரிக்கவில்லை. என்னை மோசமான பெண்ணாக நினைத்து தமிழர்கள் என்னை ஒதுக்கினார்கள். தமிழ் பெண்ணான என்னை நிராகரித்து விட்டு கேரளாவை சேர்ந்த ஒரு பெண்ணை தேர்வு செய்தீர்கள். தமிழர்கள் சரியானதையே எப்போதும் தேர்வு செய்வார்கள் என்று சமூக தளங்களும் அதற்கு ஆதரவு கொடுத்தன. 

அதேபோல் இப்போது திராவிட கட்சிகள் உங்களை முட்டாளாக்கி வருகின்றனர். அவர்களை ஏன் நீங்கள் நிராகரிக்கவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சரியானவர்களை தேர்வு செய்ததாக கூறும் தமிழர்கள்  திராவிடக் கட்சிகளை நிராகரிக்காதது ஏன்? என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார் காயத்ரிரகுராம். மேலும் நீங்கள் அனைவரும் மிகவும் குழப்பமான மக்கள். உங்களை எல்லாம் எளிதாக விலை கொடுத்து வாங்கி விடலாம். நீங்கள் எல்லாம் ஆட்டு மந்தைகள் என்றும் காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். 

காயத்ரி ரகுராமின் இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். குறிப்பாக தமிழர்கள் எப்போதும் உண்மையாக இருப்பவர்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள், அது பிக்பாஸ் ஆக இருந்தாலும் சரி, அரசியல் ஆக இருந்தாலும் சரி என்பது போன்ற கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகின்றன.

More News

உலகின் கவனத்தை ஈர்த்த ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டம்

தமிழகம் மற்றும் கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையிலான காவிரி பிரச்சனை இரு மாநிலங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு பிரச்சனையாக கடந்த பல வருடங்களாக இருந்தது.

தாயின் பேட்டியை பார்த்து கதறிய ஸ்ரீரெட்டி

தெலுங்கு திரையுலகில் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நடிகை ஸ்ரீரெட்டி என்பது தெரிந்ததே.

ஸ்ரீரெட்டி லீக் செய்த அடுத்த பிரபலம்: அதிர்ச்சியில் டோலிவுட்

நடிகை ஸ்ரீரெட்டி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபலங்களின் பெயர்களை அவ்வப்போது லீக் செய்யவுள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

நம்மைவிட அவர்க்ள் உயர்ந்தவர்கள்; சத்யராஜ்

காவிரி மேலாண்மை வாரியம் அமைய கடந்த சில நாட்களாக திரையுலகினர்களின் போராட்டம் தீவிரமாக உள்ளது. குறிப்பாக பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன் ஆகியோர்களின் போராட்டம் உணர்ச்சிப்பெருக்காக உள்ளது.

கர்நாடக மக்களுக்கு நன்றி கூறிய சிம்பு

ஏப்ரல் 11ஆம் தேதி கன்னட மக்கள் அங்கு வாழும் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்து இருமாநில மக்களுக்கும் இடையே எந்தவித வெறுப்பும் இல்லை என்று நிரூபியுங்கள் என்று சிம்பு வேண்டுகோள் விடுத்திருந்தார்