close
Choose your channels

மொட்டை தலை.. நெற்றியில் நாமம்.. கையில் மயிலிறகு.. காயத்ரி ரகுராம் புதிய தோற்றம்..!

Thursday, August 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் திடீரென மொட்டை தலை, நெற்றியில் நாமம், கையில் மயிலிறகுடன் உடன் கூடிய புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் பிரபுதேவா நடித்த ’சார்லி சாப்ளின்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் காயத்ரி ரகுராம். அதன் பிறகு ’பரசுராம்’, ‘விசில்’ ’வானம்’ ’வை ராஜா வை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். நடிப்பதில் மட்டுமின்றி அவர் நடன இயக்குனராகவும் இருந்து உள்ளார் என்பதும் ’யாதுமாகி நின்றாய் என்ற படத்தை தயாரித்து இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அரசியல் ஈடுபட்டு வரும் காயத்ரி ரகுராம் அரசியல் கருத்துக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் திருப்பதி சென்று மொட்டை அடித்து நெற்றியில் நாமத்துடன் கையில் மயிலிறகுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். 10 வருடத்திற்கு பிறகு தனது திருப்பதி பயணம் இருந்ததாகவும் தனது வேண்டுதல் நிறைவேறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவரது இந்த புகைப்படத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக வனிதா விஜயகுமார் தனது வாழ்த்துக்களை முதல் நபராக கமெண்டில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment