'லியோ' படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய பிரபலம்.. அடுத்தது யார் யார்?

  • IndiaGlitz, [Saturday,March 04 2023]

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ’ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீர் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் மைனஸ் டிகிரி வெப்பநிலை இருந்தபோதிலும் கூட படப்பிடிப்பில் எந்த விதமான சுணக்கமும் இன்றி திட்டமிட்டபடி நடந்து வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் விஜய் மற்றும் த்ரிஷா ஆகிய இருவரும் பிரேக் எடுத்துக்கொண்டு சென்னை திரும்பி உள்ளதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தற்போது காஷ்மீர் படப்பிடிப்பில் கடந்த சில நாட்களாக கலந்து கொண்டு இருந்த இயக்குனர் கௌதம் மேனன் தனது பகுதியின் படப்பிடிப்பை முடித்து விட்டதாகவும் இதனை அடுத்து அவரும் சென்னை திரும்பி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே இந்த படத்தின் வில்லன்களில் ஒருவராக நடித்த இயக்குனர் மிஷ்கின் தனது பகுதியை முடித்துவிட்டு சென்னை திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக மெயின் வில்லன்களாக நடிக்கும் சஞ்சய் தத் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜூன் ஆகியோர் காஷ்மீர் செல்ல இருப்பதாகவும் அதனை அடுத்து விஜய்யும் காஷ்மீருக்கு மீண்டும் செல்ல இருப்பதாகவும் விஜய்யுடன் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் மோதும் காட்சிகள் அடுத்தகட்டமாக படமாக்கப்படும் என கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.