முதல்முறையாக இணையும் கவுதம்மேனன் மற்றும் விஷ்ணுவிஷால்!

  • IndiaGlitz, [Friday,December 27 2019]

இயக்குனர் கவுதம்மேனன் இயக்கிய ’என்னை நோக்கி பாயும் தோட்டா’ சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது அவர் இயக்கிய ’குயீன்’ என்ற வெப்சீரிஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் அவர் தற்போது ’ஜோஸ்வா இமைபோல் காக்க’ படத்திலும் ’துருவ நட்சத்திரம்’ படத்திலும் பிசியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது விஷ்ணு விஷால் நடித்து வரும் ’எப்.ஐ.ஆர்’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க கவுதம்மேனன் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. விஷ்ணு விஷால் மற்றும் கவுதம்மேனன் முதல்முறையாக இணைந்திருக்கும் ’எப்.ஐ.ஆர்’ படத்தின் படப்பிடிப்பில் இன்று கவுதம்மேனன் கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. கவுதம் மேனன் ஏற்கனவே அவர் இயக்கிய சில படங்களிலும் ‘கோலி சோடா 2’ உள்பட ஒருசில படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷ்ணு விஷால் ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்கும் இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் ரைசா வில்சன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் ’பிகில்’ புகழ் ரெபா மோனிகா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை மனு ஆனந்த் இயக்கிவருகிறார். அஸ்வந்த் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது