மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்ட சூர்யா-கவுதம் மேனன்

  • IndiaGlitz, [Monday,August 01 2016]

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா நடித்த 'காக்க காக்க 'திரைப்படம் கடந்த 2003ஆம் ஆண்டு இதே நாளில் (ஆகஸ்ட் 1) வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த படத்தின் 13வது ஆண்டு நாளை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் கவுதம் மேனன் தனது சமூக வலைதளத்தில் சூர்யா, ஜோதிகா உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த நன்றிக்கு பதில் கூறியுள்ள நடிகர் சூர்யா, 'எனக்கும் ஜோதிகாவுக்கும் இந்த படம் மறக்க முடியாத படம். இந்த ஒரே ஒரு படம் என்னுடைய வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிட்டது. நன்றி' என்று கூறியுள்ளார்.
இந்த உரையாடலில் இருந்து 'துருவ நட்சத்திரத்தில் இருந்து பிரிந்த இந்த இருபெரும் மேதைகள் மீண்டும் இணைவார்கள் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

More News

தீபாவளிக்கு வெளிவருகிறது 'மகிழ்ச்சி' மற்றும் 'நெருப்புடா'

தமிழ் வார்த்தைகளான மகிழ்ச்சி மற்றும் நெருப்பு ஆகியவற்றை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் உச்சரிக்காமல் இருந்திருக்க வாய்ப்பு இல்லை...

ஏ.ஆர்.ரஹ்மானின் அடுத்த படத்தில் 9 பாடல்கள்

'மின்சார கனவு', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' ஆகிய படங்களை இயக்கிய ராஜீவ் மேனன், தற்போது இயக்கவுள்ள புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கவுள்ள செய்தியையும், இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான்...

மிஷ்கின் - ராம் இணைந்த 'சவரக்கத்தி' சிங்கிள் ரிலீஸ் தேதி

பிரபல இயக்குனர்கள் மிஷ்கின், ராம் ஆகிய இருவரும் இணைந்த படமான 'சவரக்கத்தி' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...

சீயான் விக்ரமின் 'இருமுகன்'. டிரைலர் விமர்சனம்

சீயான் விக்ரம் நடிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள 'இருமுகன்' படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சற்று முன்னர் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது...

விக்ரமின் சூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாகம். ஹரி அறிவிப்பு

சீயான் விக்ரம் நடித்த 'இருமுகன்' படத்தின் இசை வெளியீடு சற்று முன்னர் சென்னையில் நடைபெற்றது.