ஒரே நாளில் அம்பானி, அதானிக்கும் கீழே சரிந்த ஃபேஸ்புக்கின் மார்க் ஜுக்கர்பெர்க்… நடந்தது என்ன?

உலகளவில் டிஜிட்டல் சேவையில் முன்னணியில் இருந்துவரும் ஃபேஸ்புக்கின் தாய்நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் பங்குகள் நேற்று ஒரேநாளில் கடும் சரிவை சந்தித்துள்ளன. இதனால் முதலீட்டாளர்களின் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பதோடு மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்துமதிப்பு இந்தியாவின் அதானி, அம்பானிக்கும் குறைவாக சரிவைச் சந்தித்துள்ளன.

இந்தியாவின் முன்னணி பணக்காரர்களாக இருந்துவரும் கௌதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி இருவரும் உலகப் பணக்காரர்களின் பட்டியலில் 11,12 ஆவது இடத்தைப் பிடித்திருந்தனர். ஆனால் நேற்று மெட்டா நிறுவனத்தின் பங்குகளில் 26% சரிவு ஏற்பட்டதால் 23,000 கோடி டாலர் அளவிற்கு அதன் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் மெட்டா நிறுவனத்தில் 12% பங்குகளை வைத்திருக்கும் மார்க் ஜுக்கர் பெர்க்கின் சொத்து மதிப்பும் குறைந்து தற்போது 85 பில்லியன் டாலராக குறைந்திருகிறது.

முன்னதாக ஆப்பிள் நிறுவனம் டேட்டா சம்பந்தமான பாதுகாப்பு வழிமுறைகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டுவந்தது. இதனால் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட 1,000 கோடி இழப்பீடு ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டு இருந்தது. இதைத்தவிர ஃபேஸ்புக் மென்பொருளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 192 கோடியில் இருந்து 192.9 கோடியாக இந்த வாரம் குறைந்துள்ளது. மேலும் ஃபேஸ்புக் மென்பொருளில் விளம்பரம் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு செலவுத்தொகை குறைக்கப்பட்டு உள்ளது.

இதுபோன்ற காரணங்களால் தற்போது ஃபேஸ்புக் மற்றும் அதன் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் பங்குகள் 26% குறைந்து 23,000 கோடி டாலர் இழப்பீட்டை சந்தித்து இருக்கிறது. இதனால் ஜுக்கர் பெர்க்கின் சொத்துமதிப்பு 85 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இதையடுத்து அதானி, அம்பானிக்கும் கீழே சரிந்து ஜுக்கர் பெர்க் உலகப் பணக்காரர்களின் வரிசையில் 12ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறார்.

இந்த வரிசையில் கௌதம் அதானி 90 பில்லியன் டாலருடன் 10 ஆவது இடத்தையும் 89 பில்லியன் டாலருடன் அம்பானி 11ஆவது இடத்தையும் பிடித்திருக்கின்றனர்.

More News

லதா மங்கேஷ்கரின் உடல்நிலை குறித்து அதிர்ச்சி தகவல்!

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விஜய்-புதுவை முதல்வர் சந்திப்பின் புகைப்படங்கள் வைரல்!

தளபதி விஜய்யை நேற்று புதுவை முதல்வர் ரங்கசாமி அவரது வீட்டில் சந்தித்தார் என்பதும் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று இரு தரப்பிலும் கூறப்பட்டது என்பதும் தெரிந்ததே.

'வலிமை' படத்தின் இரண்டாம் பாகமா? போனிகபூர் தகவல்!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் வரும் 24ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

'பீஸ்ட்' ரிலீஸ் தேதி மாறுகிறதா?

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸாகும்

சென்னையில் 'சர்தார்'  படப்பிடிப்பு: நாயகி பகிர்ந்த மாஸ் புகைப்படம்!

நடிகர் கார்த்தி நடித்து வரும் 'சர்தார்'  படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது.