கவுண்டமணியுடன் நடிக்கின்றாரா சிவகார்த்திகேயன்? வைரல் புகைப்படம்

  • IndiaGlitz, [Tuesday,August 24 2021]

தமிழ் சினிமா காமெடியில் கொடிகட்டி பறந்த கவுண்டமணி உடன் நடிகர் சிவகார்த்திகேயன் புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் கவுண்டமணியுடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா? என்ற கேள்வி ரசிகர் மத்தியில் எழுந்துள்ளது.

சிவகார்த்திகேயன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கவுண்டமணியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து அதில் காமெடி லெஜண்ட் கவுண்டமணி அவர்களை சந்தித்தது தனக்கு மிகப்பெரிய பெருமை என்றும் அவருடனான இந்த சந்திப்பு தனது வாழ்நாள் முழுவதும் ஞாபகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில் இந்த புகைப்படத்தின் கமெண்ட்ஸ்களில் சிவகார்த்தியன் படத்தில் கவுண்டமணி நடிக்கிறாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். சிவகார்த்திகேயன் மற்றும் கவுண்டமணி இணைந்து நடிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் ‘டாக்டர்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் ’அயலான் மற்றும் ’டான்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இதனை அடுத்து அசோக் என்பவர் இயக்கத்தில் உருவாக உள்ள ’சிங்கப் பாதை’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சென்னையின் டாப் தொழிலதிபர்களுடன் இணைந்த கமல்ஹாசன்!

சென்னையின் டாப் தொழிலதிபர்கள் வாழ்ந்து வரும் பகுதிக்கு கமல்ஹாசன் தனது இருப்பிடத்தை மாற்றிக் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 

மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் இருந்து விலகியது ஏன்? பிரபல நடிகையின் சகோதரர் விளக்கம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை என்பதும் தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது

நடிகை சமந்தாவிற்கு நயன்தாரா படக்குழு கொடுத்த அசத்தலான சர்பரைஸ்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.

விஜய் சேதுபதி, டாப்ஸி கூட்டணியில் அடுத்த படம் குறித்த அப்டேட்....!

நடிகர் விஜய் சேதுபதி அடுத்து நடிக்கவுள்ள ஹாரர் காமெடிப் திரைப்படம் குறித்த செய்திகள் வெளியாகி உள்ளது.

சட்டசபையில் பாராட்டிய தமிழக முதல்வர் ஸ்டாலின்.....!கண்கலங்கிய அமைச்சர்......!

திமுக கட்சியை சிறப்பாக வழிநடத்தவும், ஆட்சியை சீராக செய்யவும் எனக்கு உறுதுணையாக இருப்பவர் அமைச்சர் துரைமுருகன்,