நாளை முதல் திரையரங்குகள் மூடப்படுகிறதா?

  • IndiaGlitz, [Wednesday,January 05 2022]

தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு என்றும் ஞாயிற்றுக்கிழமையில் முழு நேர ஊரடங்கு என்றும் தமிழக அரசு சற்று முன் அறிவித்தது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி நாளை முதல் அமல்படுத்தப்பட உள்ள இரவு நேர ஊரடங்கின்போது அனைத்து திரையரங்குகளிலும் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து திங்கள் முதல் சனிக்கிழமை வரை 50 சதவீத பார்வையாளர்களுடன் தமிழகத்தில் திரையரங்குகள் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் முழு ஊரடங்கு தினமான ஞாயிற்றுக்கிழமை திரையரங்குகள் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பை அடுத்து ’வலிமை’ உள்பட புதிய திரைப்படங்கள் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா? அல்லது தள்ளி வைக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.