பெயர் மாற்றப்பட்ட “பேஸ்புக்“… CEO அறிவிப்பு!

சமூகவலைத்தள நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் “பேஸ்புக்“கின் பெயர் மாற்றப்பட்டு புதிதாக “மெட்டா“ எனும் பெயர் சூட்டப்பட்டு உள்ளதாக அந்நிறுவனத்தின் செயல் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் தகவல் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் பரவலான மக்களால் பேஸ்புக் செயலி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தின் கீழ் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற செயலிகளும் நிர்வாகம் செய்யப்படுகின்றன. இந்நிலையில் அதன் ஒருங்கிணைந்த புதிய சேவை வசதிக்காக பேஸ்புக்கின் பெயர் மாற்றப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியது.

அந்த வகையில் தற்போது பேஸ்புக்கின் பெயர் மாற்றப்பட்டு “மெட்டா” எனப் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது என சமீபத்தில் நடைபெற்ற அந்நிறுவன ஆண்டுக் கூட்டத்தில் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். மேலும் உலகம் மெட்டாவெர்ஸ் நோக்கி பயணிக்கிறது என்றும், அதே கோணத்தில் பேஸ்புக் தன்னுடைய கவனத்தை திருப்பி வருவதாகவும் அதைப் பிரதிபலிக்கும் விதமாக நிறுவனத்தின் பெயரை மாற்றியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மார்க் ஜுக்கர்பெர்க் சமூக பிரச்சினைகளுடன் போராடி நிறைய கற்றுக் கொண்டதாகவும் அது அனைத்தையும் கொண்ட புதிய அத்தியாயத்தை உருவாக்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பேஸ்புக்கின் பெயர் மாற்றப்பட்டு உள்ளதே தவிர அவற்றின் ஆப்களும் பிராண்டுகளும் மாறவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

More News

ரஜினிகாந்த் உடல்நலம் குறித்து மருத்துவமனை அறிக்கை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு ரத்த ஓட்டத்தை

கல்வி முறையே தவறாக இருக்கிறது? விரக்தியில் மாணவர் எடுத்து விபரீத முடிவு!

கர்நாடக மாநிலத்தில் பொறியியல் மாணவர் ஒருவர், கல்வி முறையே தவறாக இருக்கிறது, அதில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும்

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் காலமானார்!

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் சற்று முன்னர் மாரடைப்பு காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வந்த நிலையில்

பிரபல நடிகருக்கு மாரடைப்பு: மருத்துவமனை சென்று விசாரித்த முதல்வர்!

பிரபல நடிகருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து முதலமைச்சர் நேரில் சென்று விசாரித்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ரஜினி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் திடீர் போலீஸ் பாதுகாப்பு! 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு ரத்தநாள கசிவு ஏற்பட்டு இருப்பதாகவும் அதனை சரிசெய்யும்