பிரண்ட்-அ போல யாரு மச்சா.....? குடும்பத்தை மறந்து, தற்கொலையிலும் இணைந்த நண்பர்கள்....!

  • IndiaGlitz, [Tuesday,August 10 2021]

என் நண்பன் சென்ற இடத்திற்கே நானும் சென்று விடுவேன் என்று கூறி இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னை, குரோம்பேட்டையில் உள்ள லக்ஷ்மிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தான் சரத்குமார் (35), ராஜேஸ்வரி (28) தம்பதியினர். இவர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இப்பகுதியில் உள்ள வாடகை வீட்டில் குடியேறியுள்ளனர். குமார் அங்கு ஆட்டோ ஓட்டி சம்பாதித்து, குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவரின் சிநேகிதர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனால் நண்பரின் இறப்பில் இருந்து மீள முடியாத துன்பத்தில் இருந்து வந்துள்ளார் குமார். கவலையை மறக்க தினமும் அதிகளவில் குடித்து, குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு எப்போதும் போல குடித்துவிட்டு வந்து, உள்பக்கம் தாளிட்டு படுத்துள்ளார். மனைவியும் வருத்தத்தில் இருக்கும் அவரை தொந்தரவு செய்யக்கூடாது என நினைத்து, பக்கத்து அறைக்கு சென்று குழந்தைகளுடன் உறங்கியுள்ளார்.

ஆனால் நேற்று வெகுநேரம் ஆகியும் குமார் கதவை திறக்காததால், சந்தேகமடைந்த மனைவி அக்கம்பக்கத்தினரை சத்தம் போட்டு எழுப்பியுள்ளார். பதற்றத்துடன் அவர்கள் வந்து கதவை திறந்து பார்க்க மின்விசிறியில் தொங்கிய நிலையில் குமார் சடலமாக இருந்துள்ளார். இதன்பின் குரோம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுபற்றி ராஜேஸ்வரி போலீசாரிடம் கூறியிருப்பதாவது, என் நண்பன் சென்ற இடத்திற்கே நானும் சென்று விடுவேன் எனக் கூறி தினமும் அழுவார். அதிகம் குடித்துவிட்டு வந்து நண்பனை நினைத்து புலம்புவார். அடிக்கடி என் நண்பன் சென்ற இடத்திற்கு நானும் சென்றுவிடுவேன் என்பார் என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.
 

More News

நடிகை ராதிகாவை பெருமைப்படுத்திய ஹரி-அருண்விஜய் படக்குழுவினர்!

பிரபல நடிகை ராதிகாவுக்கு ஹரி மற்றும் அருண்விஜய் படக்குழுவினர் பெருமைப்படுத்திய புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

சன்னிலியோன் அக்காவுக்கு தெரிஞ்சா என்ன நினைப்பாங்க: டிக்டாக் ஜிபி முத்து ஆதங்கம்

சன்னி லியோனுடன் நான் நடிப்பதை அடுத்து வதந்திகளை சிலர் பரப்பி வருவதாகவும் இதனை சன்னி லியோன் அக்கா பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்றும் டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து கூறியிருப்பது பெரும்

இறுக்கமான ஆடை… இளம்பெண்ணை அடித்தே கொன்ற தாலிபான்கள்!

இறுக்கமான ஆடை அணிந்த குற்றத்திற்காக தாலிபான்கள் கடுமையாகத் தாக்கியதில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஆப்கானிஸ்தானில் நடைபெற்று இருக்கிறது.

சிம்புவின் அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்த காவல்துறையினர்: காரணம் இதுதான்!

சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர் செய்த காரியம் ஒன்றை அடுத்து காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் அவருக்கு பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

அழிவின் விளிம்பில் இருக்கும் உலகம்? ரெட் அலர்ட் விடுக்கும் பகீர் அறிக்கை!

சமீபகாலமாகப் பூமியில் வரலாறு காணாத அளவிற்கு அதிக வெப்பம், அதிக மழை, அனல் காற்று அதிகரித்து இருப்பது