ஒரு ஈயை கொல்லப்போய் வீட்டையே கொளுத்திய தாத்தா!!! வைரல் சம்பவம்!!!

  • IndiaGlitz, [Monday,September 07 2020]

 

பிரான்ஸ் நாட்டில் முதியவர் ஒருவர் ஈயைக் கொல்லுவதற்கு முயற்சி செய்து வீட்டையே கொளுத்திய சம்பவம் கடும் வைரலாகி இருக்கிறது. பார்கோ-செர்னோ என்ற கிராமத்தில் வசித்து வந்த 80 வயது முதியவர் தனது இரவு நேர உணவை உண்ணத் தொடங்கியிருக்கிறார். அப்போது அந்த உணவை சுற்றிக்கொண்டு ஒரு ஈ பறந்திருக்கிறது.

முதலில் ஈயை கைகளால் விரட்டியிருக்கிறார். ஆனால் அது முதியவரை விட்டு நகராமல் வட்டமிட்டு சுற்றியிருக்கிறது. போதாதற்கு சத்தம் வேறு. இதனால் கடுப்பான முதியவர் எப்படியாவது இந்த ஈயை கொல்ல வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார். இதற்காக கொசு பேட்டை எடுத்து (மின்சாரபேட்) ஈயை துரத்தித் துரத்தி அடித்திருக்கிறார். ஆனால் ஈ மாட்டியதா என்று தெரியவில்லை. அந்நேரத்தில் அவருடைய வீட்டில் சமையல் எரிவாயு கசிவு ஏற்பட்டு இருக்கிறது. ஏற்கனவே சமையல் எரிவாயு சமையல் அறை முழுவதும் பரவியிருந்திருக்கிறது. அதுதெரியாமல் ஈயைக் கொல்லுவதற்கு முதியவர் முயற்சி செய்து மின்சாரப் பேட்டால் வீசியிருக்கிறார்.

மின்சாரம் எரிவாயுவில் பட்டு திடீரெனத் தீப்பிடித்து இருக்கிறது. அப்படி ஏற்பட்ட தீயினால் சமையல் அறை முழுதும் எரிந்து நாசாமாயிருக்கிறது. வீட்டின் கூரையும் பழுதடைந்து இருக்கிறது. சிறிய காயங்களுடன் தற்போது முதியவர் வேறு ஒரு இடத்தில் தங்க வைக்கப் பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. பொதுவாக மூட்டைப் பூச்சிக்கு பயந்து யாராவது வீட்டைக் கொளுத்துவார்காளா? என்ற பழமொழி கூறப்படுவது உண்டு. இங்கு ஈ க்கு பயந்து வீட்டையே கொளுத்திய சம்பவம் உண்மையில் நடந்திருக்கிறது என்பதுதான் ஆச்சர்யமே.