கட்டணம் இல்லாத இலவச செல்போன் குறைதீர்ப்புத் திட்டம்… முதல்வரை பாராட்டும் சாமானிய மக்கள்!

1100 என்ற செல்போன் எண்ணைக் கொண்டு இனி இலவசமாக மக்கள் தங்களின் குறைகளை நேரடியாக தெரிவிக்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு திட்டத்தை அமல்படுத்தி உள்ளார். இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனடியாக தங்களின் செல்போன் மூலம் அதுவும் இலவசமாகத் தெரிவிக்க முடியும்.

இதற்காக முதல்வரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.12 கோடியே 78 லட்சம் செலவில் சிறப்புத் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து 110 விதியின் கீழ் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில் தற்போது வெவ்வேறு அரசுத் துறைகள் தங்களுக்கென தனித்தனியே துறைவாரியான மக்கள் குறைதீர்ப்பு மையங்கள் மற்றும் இணையதளங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் 1100 என்ற கட்டணமில்லா தொலைபேசி சிறப்புத் திட்டம் உருவாக்கப்படும் என்றார். இதற்காகத் தற்போது ரூ.12 கோடியே 78 லட்சம் மதிப்பில் 100 இருக்கைகளுடன் முதல்வரின் உதவி அழைப்பு மையம் சென்னை சோழிங்க நல்லூரில் எற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் பொதுமக்கள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை குறைகளை தெரிவிக்கலாம். மேலும் பொதுமக்கள் தங்கள் குறைகளை 24 மணிநேரமும் CMHelpline.tnega.org என்ற இணையதளம் வாயிலாகவும் தெரிவிக்கலாம். இந்நிலையில் பயன்பாட்டிற்கு வந்த சிறப்பு 1100 இலவச செல்போன் திட்ட அறிவிப்பை தொடர்ந்து பொதுமக்கள் பலரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

More News

விவசாயிகளின் போராட்டம் குறித்து சகாயம் ஐஏஎஸ் வெளியிட்ட அதிரடி கருத்து!

டெல்லியில் விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத் திருத்தத்தை திரும்ப பெறுமாறு தொடர்ந்து

'தர்பார்' பட நடிகைக்கு திருமணம்: ஒரு ஆண்டாக லிவிங் டுகெதரில் வாழ்ந்தவர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகைக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. இவர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தனது காதலருடன் லிவிங்டுகெதர்

உங்களுக்கு பொழுதுபோக்கு எனக்கு தொழில்: ரசிகர்களுக்கு அறிவுரை கூறி அஜித் அறிக்கை!

'வலிமை' படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

சொந்த மண்ணில் சதம் மற்றும் 5 விக்கெட்டுக்கள்: அஸ்வினுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 13ஆம் தேதி 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தொடங்கியது என்பது தெரிந்ததே

'முரட்டு சிங்கிள்ஸ் டே' கொண்டாடிய பாலாஜி: ஷிவானிக்கு மட்டும் கேக் ஊட்டாதது ஏன்?

உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடிய நிலையில் காதலன் அல்லது காதலி இல்லாதவர்கள் முரட்டு சிங்கிள்ஸ் டே' கொண்டாடி காதலர்களுக்கு வெறுப்பேற்றினர்.