ரூ.3 கோடி முதல் ரூ.30 லட்சம் வரை: நடிகை சாந்தினி கும்பல் குறித்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் விளக்கம்!

  • IndiaGlitz, [Saturday,May 29 2021]

தன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகை சாந்தினியை யார் என்றே தெரியாது என்றும், அவரை நான் பார்த்ததே இல்லை என்றும் அவரது கும்பல் தன்னிடம் ரூபாய் 3 கோடி வரை கேட்டு மிரட்டியதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் விளக்கமளித்துள்ளார்.

‘நாடோடிகள்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகை சாந்தினி நேற்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பாலியல் புகார் ஒன்றை அளித்தார். முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னுடன் நெருக்கமாக பழகி குடும்பம் நடத்தியதாகவும் இதன் காரணமாக தான் கர்ப்பமாக இருந்த நிலையில் வலுக்கட்டாயமாக கர்ப்பத்தை கலைக்க வைத்ததாகவும், மேலும் தன்னை திருமணம் செய்ய மறுத்ததோடு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் புகாரில் அளித்திருந்தார்.

இந்த புகார் குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அவர்கள் ’சாந்தினி என்ற பெண் யார் என்று தனக்கு தெரியாது என்றும், புகைப்படம் இருப்பதாகவும் பணம் கொடுத்தால் வெளியே சொல்ல மாட்டோம் என்ற அவரது கும்பல் மிரட்டியதாகவும், நேரில் சென்று விசாரித்த போது அந்த கும்பல் பணம் பறிக்கும் கும்பல் என தெரிய வந்ததாகவும் கூறினார். முதலில் ரூ.3 கோடி வரை பேரம் பேசிய அந்த கும்பல் அதன் பின்னர் படிப்படியாக இறங்கி 30 லட்சம் வரை கொடுங்கள் என தன்னிடம் பேரம் பேசினார்கள் என்றும், தவறு செய்யாத நான் ஏன் அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும்? பயப்படவேண்டும் என்று பணம் கொடுக்க மறுத்து விட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் இந்த விளக்கத்தை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

கொரோனாவுக்கு பலியான தமிழ் நடிகர்-தயாரிப்பாளர்: அதிர்ச்சியில் திரையுலகம்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்கனவே பல திரையுலக பிரபலங்கள் அடுத்தடுத்து காலமாகி வருவது திரையுலகினர்க்ளை மட்டுமின்றி ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

ஒரு குடும்பத்தில் 6 பேரை காவு வாங்கிய கொரோனா...! மனதை உருக்கும் சோக நிகழ்வு.....!

திருப்பூரில் தன் நான்கு மகன்கள் இறந்ததை கேட்டு, அவர்களின் தாயும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பசிக்கிறதா எடுத்துச் சாப்பிடுங்க… போர்ட் வைத்து மனிதநேயத்தை காட்டிய அதிசய மனிதர்!

கொரோனா பீதிக்கு இடையில் ஒரு மனிதர் “பசிக்கிறதா எடுத்துச் சாப்பிடுங்க…

மேலும் ஒரு வாரம் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு: முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் மீண்டும் ஒருவாரம் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின்

வைரமுத்துவிற்கு விருது...கிளம்பிய சர்ச்சை...! மறுபரிசீலனை செய்ய ஓ.என்.வி., அகாடமி முடிவு ....!

கேரளாவில் இருந்து கவிஞர் வைரமுத்துவிற்கு வழங்கப்போகும் விருது குறித்து பரிசீலனை செய்ய, ஓ.என்.வி., கலாச்சார அகாடமி முடிவெடுத்துள்ளது.