விஜய் மட்டும் தான் குரல் கொடுத்துள்ளார். மற்றவர்களுக்கு ஏன் அச்சம்? ஜெயக்குமார் கேள்வி..!

  • IndiaGlitz, [Thursday,June 20 2024]

கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து விஜய் உட்பட ஒரு சிலர் மட்டுமே கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் மற்றவர்கள் ஏன் அச்சப்படுகிறார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் தவறு நிகழும் போது திரை உலகத்தை சேர்ந்த பலர் தைரியமாக முன்வந்து கேள்வி கேட்ட நிலையில் தற்போது ஒரு சிலர் மட்டுமே கேள்வி கேட்டு வருவது நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பதாவது:

கள்ளச்சாராயத்தால் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மருத்துவமனையின் தூண்களிலும் சாலைகளிலும் கதறி கொண்டிருக்கும் காட்சிகள் கண்களை கலங்க வைக்கிறது!

இத்தனைக்கு பிறகும் திரைத்துறையை சேர்ந்தவர்களிடம் இருந்து ஒரு குரலும் வரவில்லை!

நடிகர் விஜய் மட்டும் தனக்கு வாய்ப்பளித்து வளர்த்துவிட்ட தமிழர்களுக்கு இடர் நேரங்களில் துணை நிற்க வேண்டும் என உணர்ந்து குரல் கொடுத்துள்ளார்!
மீதமுள்ளவர்கள் யாரை கண்டு‌ அஞ்சுகின்றனர்?

ஏழை எளிய மக்கள் 200.ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்குவதால் தான் நீங்கள் 100 கோடி,200 கோடி வரை சம்பளம் வாங்குகிறீர்கள்.

அந்த மக்களுக்கு இது போன்ற நேரங்களில் ஆதரவை கொடுக்க வேண்டிய சமூக பொறுப்பு உங்கள் அனைவருக்கும் கட்டாயம் இருக்கிறது.

மானத்தமிழன் மாண்டு போவதை வேடிக்கை பார்க்கும் திரைத்துறையை‌ சார்ந்தவர்களை மக்கள் மன்னிக்க‌ மாட்டார்கள்!

 

More News

கள்ளச்சாராய வியாபாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.. கமல்ஹாசன்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 30 பேர் வரை உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி அரசியல்  தலைவர்கள் கண்டனம்

'புஷ்பா 2' ரிலீஸ் தள்ளி வைக்க துணை முதல்வர் காரணமா? அதிர்ச்சி தகவல்..!

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென இந்த படம் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று ரிலீஸ் செய்தி

கள்ளச்சாராய மரணத்திற்கு யார் காரணம்? யார் பொறுப்பேற்பது? சரத்குமாரின் அடுக்கடுக்கான கேள்விகள்..!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இந்த சம்பவத்திற்கு நடிகர் சரத்குமார் வருத்தம் தெரிவித்து

தமிழக அரசின் அலட்சிய போக்கே காரணம்.. கள்ளக்குறிச்சி மரணங்கள் குறித்து பா ரஞ்சித்..!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 30 பேர்கள் வரை பலியான சம்பவத்திற்கு ஏற்கனவே தளபதி விஜய் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது இயக்குனர் பா ரஞ்சித் தமிழக அரசுக்கு கண்டனம்

நடிகர் விமல் அடுத்த படத்தில் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 இரண்டு நடிகைகள்.. வைரல் புகைப்படம்..!

விமல் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இரண்டு போட்டியாளர்கள் நடிக்க உள்ள நிலையில் இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.