இஸ்ரோ விஞ்ஞானிகளின் சம்பளம் எவ்வளவு? போட்டு உடைத்த மாதவன் நாயர்..!

  • IndiaGlitz, [Saturday,August 26 2023]

இஸ்ரோ விஞ்ஞானிகள் சம்பளம் மிகவும் குறைவு என்றும் இருப்பினும் இஸ்ரோ விஞ்ஞானிகள் முழு ஈடுபாட்டுடன் பணிபுரிவதால் தான் குறைந்த செலவில் விண்கலங்களை விண்ணிற்கு செலுத்த முடிகிறது என்றும் முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இந்தியாவின் சந்திராயன் 3 நிலவை சென்றடைந்தது என்பதும் நிலவின் தென்துருவத்தை அடைந்த முதல் நாடு என்ற பெருமையை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வை ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளின் சம்பளம் குறித்து முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

வளர்ந்த நாடுகளில் உள்ள விண்வெளி விஞ்ஞானிகளுக்கு அளிக்கப்படும் சம்பளத்தை விட ஐந்து மடங்கு குறைவாகவே இஸ்ரோ விஞ்ஞானிகள் பெற்று வருகின்றனர் என்றும் இஸ்ரோவின் விஞ்ஞானிகள் யாரும் கோடீஸ்வரராக இல்லை என்றும் சாதாரணமான வாழ்க்கை தான் வாழ்ந்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

குறைந்த சம்பளம் என்றாலும் முழு ஈடுபாட்டுடன் இஸ்ரோ விஞ்ஞானிகள் பணிபுரிந்து வருவதால் தான் குறைந்த செலவில் இந்தியாவால் விண்கலங்களை அனுப்ப முடிகிறது என்றும் அவர் தெரிவித்தார். இதனை அடுத்து சாதனை செய்து வரும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சம்பளம் அதிகரித்து கொடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

More News

தேசிய விருது பெற்ற கையோடு சுறுசுறுப்பாகும் 'புஷ்பா 2' குழுவினர்.. படப்பிடிப்பில் ராஷ்மிகா..!

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்த 'புஷ்பா' திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

'ஜெய்பீம்' படத்திற்கு விருது இல்லையா? கொதித்து எழுந்த திரையுலகினர்..!

69 வது தேசிய விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் 'ஜெய்பீம்' 'சார்பாட்டா பரம்பரை' மற்றும் 'கர்ணன்' ஆகிய திரைப்படங்களுக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

விஜய் டிவிக்கு வந்த நடிகர் அப்பாஸ்.. அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்குமா?

தமிழ் திரை உலகில் சாக்லேட் பாய் என்று அழைக்கப்பட்டவர் நடிகர் அப்பாஸ் என்பதும் அவருக்கு 1990களில் ஏராளமான பெண் ரசிகைகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் டிராப்.. வேறு தயாரிப்பு நிறுவனம்.. 'விடாமுயற்சி' வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சுபாஷ்கரன்..!

அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் 'விடாமுயற்சி' படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. ஆனால் இந்த படத்தின் மற்ற

ரூ.500 கோடிக்கு புள்ளி வைத்த 'பொன்னியின் செல்வன்'.. கோலம் போடும் மாஸ் நடிகர்களின் படங்கள்..!

தெலுங்கு திரை உலகில் 'பாகுபலி', 'பாகுபலி 2'  மற்றும் 'ஆர்.ஆர்.ஆர்', கன்னடத் திரையுலகில்  'காந்தாரா' பாலிவுட்டில் 'பதான்' ஆகிய திரைப்படங்கள் 500 கோடி  ரூபாய் முதல் 1000 கோடி ரூபாய் வரை வசூல்