அமைச்சராக இருந்தவர்… டெலிவரி பாயாக வேலை செய்யும் அவலம்!

  • IndiaGlitz, [Thursday,August 26 2021]

பாதுகாப்பு அதிகாரிகள் புடைசூழ ஆப்கானிஸ்தான் அமைச்சராக இருந்த ஒருவர் தற்போது ஜெர்மனி சாலைகளில் உணவு டெலிவரி செய்யும் ஊழியராக வலம் வருகிறார். இதுகுறித்த புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கு முன்பு ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபராக இருந்த அஷ்ரப்கானி அமைச்சரவையில் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக இருந்தவர்தான் சையத் அஹ்மத் சதாத். இவர் கடந்த 2018 முதல் அவரது அமைச்சரவையில் தீவிரமாக பணியாற்றி வந்தார். ஆனால் கடந்த 2020 இல் அதிபருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டைவிட்டே வெளியேறிவிட்டார்.

இந்நிலையில் ஜெர்மனி சென்ற முன்னாள் அமைச்சர் சையத் தன்னிடம் இருந்த பணம் அனைத்தும் தீர்ந்துவிட்டதால் அந்நாட்டில் உள்ள லிவ்ராண்டோ நிறுவனத்தில் உணவு விநியோகம் செய்யும் ஊழியராகப் பணியாற்றத் துவங்கிவிட்டார். இந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டியில் 2 முதுகலைப்பட்டம் படித்தவரின் நிலைமையே இப்படியா என அதிர்ச்சி வெளியிட்டு வருகின்றனர்.

சையத் அமைச்சராக பதவிவகித்த காலத்தில் சவுதி டெலிகாம் நிறுவனத்திறக்காக சவுதி அரேபியா உட்பட 13 நாடுகளில் இருக்கும் 20 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் தகவல் தொடர்பு துறையில் 23 ஆண்டுகள் பணியாற்றினார். 2005-2013 வரை ஆப்கானிஸ்தானில் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தில் ஆலோசகராகவும் பணியாற்றி உள்ளார்.

மேலும் 2016 – 2017 வரை லண்டனில் உள்ள அரியானா டெலிகாமின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பொறுப்பு வகித்தார். அடுத்து 2018 இல் ஆப்கானிஸ்தான் அமைச்சரவையில் எம்.பி பதவிவகித்த இவர் தற்போது ஜெர்மனியின் லீப்ஜிக்கில் வசித்துக்கொண்டு டெலிவரி பாயாக வேலை செய்து வருவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் முன்னாள் அமைச்சர் சையத்தின் புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

More News

சிம்புவின் 'பத்து தல' படப்பிடிப்பு: வைரல் புகைப்படம்

நடிகர் சிம்பு நடித்து முடித்துள்ள 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் ஆயுத பூஜை தினத்தில் வெளியாகும்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எம்.பி, நடிகை, ...!

மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் பசீர்ஹட் தொகுதியில், எம்.பியாக  இருப்பவர்தான்  நுஸ்ரத் ஜஹான்.

மத போதகராக மாறிய தமிழ் நடிகை!

தமிழ் நடிகை ஒருவர் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் திடீரென கிறிஸ்துவ மத போதகராக மாறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் விஜய்சேதுபதியின் 4 படங்கள்!

தமிழ் திரையுலகில் மட்டுமின்றி இந்திய திரையுலகிலேயே பிஸியான நடிகர் விஜய் சேதுபதி என்று கூறலாம். அந்த அளவிற்கு அவர் கை நிறைய படங்கள் வைத்துள்ளார். அவர் நடித்து முடித்த படங்கள்

பாக்ஸிங்கை விட இது ரத்த பூமி: பசுபதிக்கு அட்வைஸ் செய்த ஆர்யா

பாக்ஸிங்கை விட இது ரத்த பூமி என டுவிட்டருக்கு வந்த நடிகர் பசுபதிக்கு நடிகர் ஆர்யா அட்வைஸ் செய்து டுவிட் ஒன்றை பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.