அஜித்தை சந்தித்து ஒரு மணி நேரம் பேசினோம்: முன்னாள் அதிமுக அமைச்சர் டுவிட்..!

  • IndiaGlitz, [Monday,April 03 2023]

நடிகர் அஜித்தை சந்தித்து ஒரு மணி நேரம் பேசும் வாய்ப்பு கிடைத்தது என்றும் அந்த பேச்சில் இருந்த யதார்த்தம் உண்மை ஆகியவைகளை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது என்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அஜித்தின் தந்தை சமீபத்தில் காலமான நிலையில் அவரது மறைவிற்கு பல திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். குறிப்பாக நடிகர் விஜய், அஜித்தின் வீட்டிற்க்கே சென்று இரங்கல் தெரிவித்தார் என்பதும் அதேபோல் பல திரையுலக பிரபலங்கள் அரசியல் பிரபலங்கள் நேரில் சந்தித்தார்கள் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் அஜித் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் அஜித்தை அவரது வீட்டில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து அவர் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

தமிழ்த்திரையுலகின் மிக முக்கியமான முன்னணி நடிகர் திரு.அஜித் குமார் அவர்களின் அன்புத் தந்தை மறைவையொட்டி மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களின் சார்பாக முன்னாள் அமைச்சர் அண்ணன் கடம்பூர் ராஜூ அவர்களுடன் அவரது இல்லம் சென்று ஆறுதல் தெரிவித்தோம்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த அச்சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசும் வாய்ப்பு அமைந்தது. அனுபவமும், மனப்பக்குவம் நிறைந்த அவருடைய பேச்சில் எதார்த்தமும் உண்மையும் பிறர்க்கு உதவ வேண்டும் என்கிற தூய மனமும் வெளிப்பட்டது மிகுந்த பாராட்டுக்குரியது. எண்ணம் போல் வாழ்க்கை, எண்ணம் போல்தான் வாழ்க்கை' அன்புத் தந்தையின் ஆசியோடு தொடர்க! வெல்க!

More News

'வாரிசு' படத்தை விட இரு மடங்கு வியாபாரமா? 'லியோ' படம் குறித்த ஆச்சரிய தகவல்..!

 தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் 60 நாட்கள்

'சூது கவ்வும்' இரண்டாம் பாகத்தில் இந்த பிரபல நடிகரா? விரைவில் அறிவிப்பு..!

 கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான விஜய் சேதுபதியின் 'சூது கவ்வும்' என்ற திரைப்படம் நல்ல வெற்றி பெற்றதை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: திரையரங்குகளுக்கு முக்கிய கட்டுப்பாடு..!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து திரையரங்குகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜயகாந்த் வீட்டில் நடந்த 100வது பிறந்தநாள் விழா.. உறவினர்கள் வைரல் புகைப்படம்..!

விஜயகாந்த் வீட்டில் நடந்த 100வது பிறந்தநாள் விழாவுக்கு விஜயகாந்த் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வருகை தந்திருந்த நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

'பொன்னியின் செல்வன் 2' படத்திற்கு முன்பே ரிலீஸ் ஆகும் லைகாவின் இன்னொரு படம்; அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனம் தயாரித்த 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் அதற்கு இரண்டு