தேனி அருகே பயங்கர காட்டுத்தீ: 8 பேர் பலி, மீட்கப்பட்டவர்களின் விபரம்

  • IndiaGlitz, [Monday,March 12 2018]

தேனி அருகேயுள்ள குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட திடீர் விபத்தில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்ட சுமார் 40 மாணவிகள் சிக்கி கொண்டனர். இவர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் உதவுமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வேண்டுகோளை ஏற்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், உடனடியாக இந்திய விமானப்படையினர்களை சம்பவ இடத்திற்கு செல்லுமாறு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் அடிப்படையில் இந்திய விமானப்படையினர், கமாண்டோ படையினர் ஹெலிகாப்டரில் சென்று தீயில் சிக்கிய மாணவிகளை விடிய விடிய தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீவிர தேடுதல் வேட்டையின் பயனாக இதுவரை இதுவரை 27 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் காயமடைந்தவர்கள் உடனடியாக தேனி மற்றும் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இந்த நிலையில் காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 8 பேர் மரணம் அடைந்திருப்பதாகவும் இவர்களின் ஐந்து பேர் பெண்கள் என்றும் தகவல்கள் வந்துள்ளது. இருப்பினும் மரணம் அடைந்தவர்கள் குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை. மருத்துவமனையில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்

மீட்புப்படையினர்களால் மீட்கப்பட்ட மாணவிகளின் விபரங்கள் பின்வருமாறு:

திருப்பூர் சிவசங்கரி, ராஜசேகர், சாதனா, பாவனா, நேகா, சபீதா, சென்னை பூஜா, சஹானா, மோனிஷா, ஸ்வேதா, இலக்கியா, விஜயலட்சுமி, அனுவித்யா. ஈரோடு சதீஷ்,

 

More News

எல்.கே.ஜிக்கு ரூ.2 லட்சமா? இது என்னடா பகல் கொள்ளையா இருக்குது!

பெங்களூர் பள்ளி ஒன்று எல்.கே.ஜி படிப்பிற்கு ரூ.2லட்சத்து 2 ஆயிரம் தொகை வசூலிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ள கையேடு ஒன்று இணணயதளங்களில் வைரலாகி வருகிறது

ராகுல்காந்தி மனிதநேயம் மிக்கவர்: கமல்ஹாசன் பேட்டி

சற்றுமுன் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி அளித்த பேட்டி ஒன்றில் 'ராஜீவ் காந்தி கொலையாளிகளை தாமும் தன்னுடைய சகோதரியும் மன்னித்துவிட்டதாக கூறியிருந்தார்.

சசிகுமாரின் அடுத்த இரண்டாம் பாக படம்

நடிகர் சசிகுமார் ஏற்கனவே நாடோடிகள்' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது மேலும் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சூர்யா, கார்த்திக்கு பின் ரகுல் ப்ரித்திசிங்கின் அடுத்த ஹீரோ யார் தெரியுமா?

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் 'NGK' படத்தில் ரகுல்ப்ரித்திசிங் நடித்து வருகிறார் என்பதும், அதேபோல் கார்த்தி நடிக்கும் 17வது படத்திலும் ரகுல் தான் ஹீரோயின் என்பதும் தெரிந்ததே

'தளபதி' ரசிகராக நடிக்கும் ஜிவி பிரகாஷ் நடிக்கும் படம்

நடிகர், இசையமைப்பாளர் என இரண்டையும் பேலன்ஸ் செய்து திரையுலகில் வேகமாக முன்னேறி வருபவர் ஜிவி பிரகாஷ். சமீபத்தில் வெளியான 'நாச்சியார்' இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்ததால் அவர் வெகு உற்சாகமாக உள்ளார்.