சிரியாவில் கொத்து கொத்தாக பலியாகும் சின்னஞ்சிறு சிறார்கள்

  • IndiaGlitz, [Monday,February 26 2018]

சிரியாவில் கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து அரசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர ஐநா உள்பட பல நாடுகள் முயற்சி செய்தும் முடியவில்லை

இந்த நிலையில் கடந்த வாரம் போராட்டக்காரகள் மற்றும் சிரியா-ரஷ்யா படைகள் மோதியதால் ஏற்பட்ட அரக்கத்தனமான தாக்குதலுக்கு ஒரே வாரத்தில் 500 அப்பாவி மக்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் பால்மணம் மாறாத குழந்தைகள் என்பது வேதனையான விஷயம்

இந்த தாக்குதலுக்கு கொத்து கொத்தாக பலியான குழந்தைகளின் புகைப்படங்கள் இண்டர்நெட்டில் வெளிவந்துள்ளது. கல்நெஞ்சையும் கரைய வைக்கும் அளவுக்கு இந்த புகைப்படங்கள் அதிர வைத்துள்ளது. இந்த தாக்குதலுக்கு மனித உரிமை கண்காணிப்பகம் தனது கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளது. கடந்த இரு நாட்களில் மட்டும் இந்த தாக்குதலில் 120 சிறுவர் சிறுமிகள் பலியாகியுள்ளதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த போரை உலக நாடுகள் தலையிட்டு உடனே நிறுத்த வேண்டும் என்று  பல்வேறு சமூக அமைப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

More News

ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கிய ஸ்ரீதேவி!

தமிழ் திரையுலகில் கடந்த 80களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவருக்குமே சிறந்த திரை ஜோடியாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி.

அஜித் குடும்பத்தை உலுக்கிவிட்ட ஸ்ரீதேவி மரணம்

அகில இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகை ஸ்ரீதேவியின் மறைவு ஒட்டுமொத்த இந்திய திரையுலகை உலுக்கிவிட்டது. ஸ்ரீதேவியின் மறைவிற்கு கமல், ரஜினி மட்டுமின்றி இன்னொரு ஸ்டார் குடும்பத்தையும் உலுக்கிவிட்டதாம்.

தமிழ் ரசிகர்களால் தான், நான் இந்த இடத்தில் நிற்கிறேன். 'கரு' நாயகி

சாய்பல்லவியின் முதல் தமிழ்ப்படமான 'கரு' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு பேசினர்

ஸ்ரீதேவி உடல் வருகை தாமதம்! என்ன நடக்கின்றது துபாயில் ?

நடிகை ஸ்ரீதேவி துபாயில் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்துள்ள நிலையில் அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வரும் ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர்களும், இந்திய தூதரகமும் தீவிர முயற்சி செய்து வருகிறது.

தூக்கு தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் மேல்முறையீடு

சென்னை போரூர் அருகே சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட தஷ்வந்த்துக்கு சமீபத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.