மனித பற்கள்....! வித்தியாசமான தோற்றுத்துடன் இருக்கும் ஆட்டுத்தலை மீன்.....!

  • IndiaGlitz, [Saturday,August 07 2021]

வித்தியாசமான தோற்றம் மற்றும் மனித பற்களைக் கொண்ட மீன் ஒன்று அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது.

வடக்கு கரோலினாவில் உள்ள ஜென்னட் பியர் என்னும் மீன் பிடித்தளத்தில் இருந்து இந்த ஆட்டுத்தலை மீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியானது முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

இந்த மீனின் சிறப்பம்சம் என்னவென்றால், இவற்றின் கடைவாய்ப்பற்கள் இரையை கடித்து தின்னும் அளவிற்கு ஏதுவாகவும், வரிசையாகவும் அமைந்திருக்கும். இதன் வாயானது ஆட்டின் வாய்ப்போல் அமைத்திருப்பதால் தான், இதற்கு ஆட்டுத்தலை மீன் என்று பெயர் வந்துள்ளது.

அந்த மீன்பிடி தளத்திற்கு தினமும் செல்லும், நாதன் மார்டின் என்பவர் தான் இந்த மீனை முதன் முதலாக பார்த்துள்ளார். இதை கண்டிப்பாக தன்னால் பிடிக்க முடியும் என்று நம்பி, அந்த அதிசியமீனை பார்த்ததாக அவர் கூறியுள்ளார். மேலும் இந்த மீனை வேட்டையாடினால் நல்ல அற்புதமான சுவையுடன் இருக்கும் என்றும் செய்தித்தளம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

#bigteethbigtimes என்ற ஹேஷ்டேக்குடன் ஷேர் செய்யப்பட்ட இந்த மீனின் புகைப்படம் அண்மையில் வைரலானது. இந்த மீனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் வேடிக்கையான கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

நானி சகோதரி இயக்கம்....! ஆந்தாலஜியில் களமிறங்கும் சத்யராஜ்...!

நடிகர் நானி தயாரிக்கவுள்ள புதிய திரைப்படத்தில், சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

முதல்முறையாக இணையும் விஜய்-செல்வராகவன்: அதிகாரபூர்வ அறிவிப்பு

தளபதி விஜய் நடிக்கும் படத்தில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இணைந்திருப்பதாக  அதிகாரபூர்வமாக அறிவித்துக்கப்பட்டுள்ளது.

அரசியல் சூரியனில் ஆழம் பதித்த கலைஞர் கருணாநிதியின் நினைவுதினம் இன்று…

50 வருடத்திற்கும் மேலாக திமுக கழகத்தைக் கட்டிக் காத்தவர், 5 முறை தமிழக முதலச்சராகப் பதவி வகித்தவர்,

லாரி டிரைவர்களுக்கு விருந்து வைத்த ஒலிம்பிக் வீராங்கனை… கண்ணீர் சிந்த வைக்கும் காரணம்!

டோக்கியோ ஒலிம்பிக் 2021 இல் இந்தியாவிற்காக முதல் பதக்கத்தை வென்று கொடுத்தவர் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு.

தலைகீழாக நின்று யோகா செய்யும் அஜித் படத்தில் அறிமுகமான நடிகை!

அஜித் படத்தில் அறிமுகமான நடிகை ஒருவர் தலைகீழாக நின்று யோகா செய்யும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது