முதல்முறையாக ரஜினியை விமர்சனம் செய்த கமல்

  • IndiaGlitz, [Monday,March 12 2018]

நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்குவதற்கு முன்பே தனக்கு நெருக்கமான பலரிடம் தெரிவித்து அவர்களிடம் வாழ்த்துக்களும், ஆசியையும் பெற்றார். அவ்வாறு சந்தித்த நபர்களில் ஒருவர் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினி, கமல் இருவருக்கும் இடையே தொழில்ரீதியில் பலமான போட்டியிருந்தாலும் இருவரும் நட்பை இன்று வரை தொடர்ந்து வருகின்றனர். ஒருவரை ஒருவர் பொதுமேடையிலோ அல்லது தனிப்பட்ட இடத்திலோ விமர்சனம் செய்தது கிடையாது

இந்த நிலையில் இன்று கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்த கமல்ஹாசனிடம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்க ரஜினி மறுக்கிறாரே என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பதில் கூறிய கமல்ஹாசன்,  காவிரி விவகாரம் என்றில்லை பல விஷயங்களில் அவர் பதில் சொல்ல மறுக்கிறார். அந்த இடத்திலிருந்து நழுவுகிறார்' என்று கூறியுள்ளார். கமலின் இந்த பதில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இருவரும் வெவ்வேறு அரசியல் பாதையில் சென்றாலும் தேர்தல் நேரத்திலோ அல்லது தேர்தல் முடிந்த பின்னரோ இருவரும் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில் திடீரென கமல்ஹாசன், ரஜினியை நேரடியாக விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

உயிர் வலிக்கிறது; ஊரே அழுகிறது: காட்டுத்தீ குறித்து கவிஞர் வைரமுத்து

குரங்கணி மலைப்பகுதியில் டிரெக்கிங் சென்ற கல்லூரி மாணவிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சுமார் 40 பேர் வரை காட்டுத்தீயில் சிக்கி கொண்ட நிலையில் அவர்களை மீட்க இந்திய விமானப்படை ஈடுபட்டு வருகின்றனர்.

குரங்கணியை டிரெக்கிங் ஆர்வலர்கள் தேர்வு செய்வது ஏன்?

தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூர் பகுதியில் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உள்ள ஒரு மலை வாசஸ்தலம் தான் இந்த குரங்கணி ஹில்ஸ்.

காட்டுத்தீயில் சிக்கி கருகிப்போன 100 நாட்களே ஆன புதுமண தம்பதி

தேனி குரங்கணி காட்டுத்தீயில் டிரெக்கிங் சென்ற மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் சிக்கி கொண்டதை அடுத்து அவர்களை உயிருடன் மீட்கும்பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

இரவோடு இரவாக மூடப்பட்ட டிரெக்கிங் நிறுவனம்? நிறுவனர் தலைமறைவு?

நேற்று தேனி அருகே ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய மாணவிகளை ஒருபுறம் மீட்கும் பணியில் இந்திய விமானப்படையும், தீயணைப்பு துறையினர்களும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

விக்ரம் மகனுக்கு ஜோடியாகும் பிரபல நடிகையின் மகள்?

சீயான் விக்ரமின் மகன் துருவ், பாலா இயக்கி வரும் 'வர்மா' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேபாளத்தில் நடைபெற்று வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்