இளையராஜாவுடன் முதல்முதலாக இணையும் தேவி ஸ்ரீ பிரசாத்!

இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி சென்னையில் மார்ச் 18ஆம் தேதி தீவு திடலில் நடைபெற உள்ளது என்பதும் இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவுடன் ஒரு சில பிரபல இசையமைப்பாளர்கள் மற்றும் பல பிரபல பின்னணி பாடகர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த இசை நிகழ்ச்சியில் தற்போது பிரபல இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இளையராஜா மற்றும் தேவிஸ்ரீபிரசாத் இருவரும் முதல் முறையாக இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்துவதை அடுத்து இந்த இசை நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.