ஓடிடியில் 'நாரப்பா': அதிர்ச்சியில் ரசிகை செய்த விபரீத செயல்!


Send us your feedback to audioarticles@vaarta.com


தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் திரைப்படமான ‘நாரப்பா’ என்ற படம் ஓடிடியில் வெளியாக இருப்பதை அறிந்த ரசிகை ஒருவர் தனது கையை பிளேடால் அறுத்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரித்த திரைப்படம் அசுரன். இந்த படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ‘நாரப்பா’ என்ற இந்த படத்தில் தனுஷ் கேரக்டரில் வெங்கடேஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாரான நிலையில் திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக முடியவில்லை. இதனையடுத்து இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். விரைவில் இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ‘நாரப்பா’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யக்கூடாது என்று அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். திரையரங்குகளில் தான் இந்த படம் ரிலீசாக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் வெங்கடேஷின் தீவிரமான ரசிகை ஒருவர் ‘நாரப்பா’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக கூடாது என்று கூறி தனது கையை பிளேடால் அறுத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
