உசந்துவிட்ட மனிதநேயம்… சாலையோர மக்களின் பசியை ஆற்றும் பெண் ஆட்டோ ஓட்டுநர்!

  • IndiaGlitz, [Tuesday,May 25 2021]

 

நெல்லையில் ஆட்டோ ஓட்டும் தொழிலை செய்துவருபவர் தேவி. இவர் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது தனது ஆட்டோவில் சென்று சாலையோர மக்களின் பசியை ஆற்றி இருக்கிறார். மேலும் கொரோனா நேரத்தில் உணவின்றி தவித்து வந்த பலருக்கும் இவர் 3 வேளையும் இலவசமாக உணவிட்டு அவர்களின் பசிப் பிணியைப் போக்கி இருக்கிறார்.

மேலும் கடந்த ஆண்டு தொடங்கிய இந்தப் பணியை தற்போது வரையில் செய்து வருவதாகத் தேவி குறிப்பிட்டு இருக்கிறார். இதற்காக தனக்கு ஆதரவு அளிக்கும் நபர்களிடம் இருந்து நன்கொடை பெற்று இவரே 3 வேளையும் சமைத்து அந்த உணவை ஆட்டோவில் எடுத்துச் சென்று சாலையோர மக்கள், மற்றும் அரசு மருத்துவமனைக்கு முன்பு பசியால் வாடுவோருக்கு வழங்கி வருகிறார்.

இதுகுறித்து கருத்துப் பகிர்ந்து கொண்ட இவர், நான் கணவரை இழந்து தனியாகத் தவித்தபோது பல நல்ல உள்ளங்கள் எனக்கு உதவிக்கரம் நீட்டின. எனக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தச் சமூகத்துக்கு நான் மீண்டும் என நன்றியை தெரிவித்து வருகிறேன். மேலும் எனக்கு நன்கொடை கிடைக்கும் அளவிற்கு நான் உணவுகளைச் சமைத்து அதை இயலாதவர்களுக்கு கொடுத்து வருகிறேன்.

இதைவிடவும் அதிகமான நன்கொடை கிடைக்கும்போது அதிகமான உதவிகளைச் செய்வேன் என உணர்ச்சிப் பொங்க தெரிவித்து இருக்கிறார். இந்தச் சம்பவத்தைத் தொடந்து தேவிக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் இயலாத நிலையிலும் மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வரும் தேவிக்கு தற்போது நன்கொடைகளைக் கொடுக்கவும் சிலர் முன்வந்து உள்ளனர்.

More News

WHO பட்டியலில் இடம்பெறாத கோவேக்சின்… என்ன செய்ய போகிறது பாரத் பயோடெக்?

இந்தியாவில் அவசரகால பயன்பாட்டு அடிப்படையில் கோவேக்சின் கொரோனா தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

விக்னேஷ் சிவனுடன் அவ்வளவு நெருக்கமானவரா பிக்பாஸ் சம்யுக்தா? வைரல் புகைப்படம்

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவர் சம்யுக்தா என்பதும் இவருக்கு ஆரம்பத்தில் ரசிகர்களின் வரவேற்பு நல்லபடியாக இருந்தாலும் திடீரென ஆரியை பகைத்து கொண்டதால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்

பிறந்தநாளன்று நடிகர் கவுண்டமணி பதிவிட்ட டுவீட்...! முக்கிய பிரச்சனை பத்திதான்....!

சேஷாத்ரி பள்ளியில் நடைபெற்ற சம்பவம் குறித்து நகைச்சுவை நடிகர் கவுண்டமணி, முக்கிய டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார்

நீச்சல் குளத்தில் ரகுல் ப்ரீத்திசிங்கை முதுகில் சுமக்கும் இந்த இளைஞர் யார்? வைரல் புகைப்படம்!

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரகுல் ப்ரீத்தி சிங் இளைஞர் ஒருவரின் முதுகில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

மணி ஹெய்ஸ்ட் சீசன் 5 ஒளிபரப்பாகும் தேதி அறிவிப்பு: ரசிகர்கள் குஷி

உலக அளவில் புகழ்பெற்ற இணைய தொடர்களில் ஒன்று மணி ஹெய்ஸ்ட் என்பது தெரிந்ததே, இந்த தொடருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு என்பதும்