பாஸ்டேக் இல்லாவிட்டால்… நள்ளிரவில் அமலுக்கு வரும் புது அறிவிப்பு!

  • IndiaGlitz, [Monday,February 15 2021]

இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம் என்ற விதிமுறையை மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் சமீபத்தில் கொண்டு வந்தது. அந்த வகையில் பாஸ்டேக் வாங்குவதை கட்டாயப்படுத்த தற்போது புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இதனால் இன்று நள்ளிரவு முதல் பாஸ்டேக் இல்லாமல் சுங்கச் சாவடிகளை தாண்டி செல்லும் வாகனங்களுக்கு முன்பு இருந்ததை விட 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பை மத்திய நெருஞ்சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் சுங்கச் சாவடிகளுக்கு பாஸ்டேக் கட்டாயமாக்கப் பட்டது. இதை செயல்படுத்துவதில் தொடர்ந்து சிக்கல் இருந்து கொண்டே வந்தன. இதனால் தொடர்ந்து விதிமுறைகளில் சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் பாஸ்டேக் கட்டாயம் என்ற விதியை மத்திய நெடுஞ்சாலைத் துறை அமலுக்கு கொண்டு வர இருக்கிறது. இதன்படி பாஸ்டேக் எடுக்காமல் நேரடியாகப் பணத்தை செலுத்த நினைக்கும் வாகன ஓட்டிகள் முன்பு இருந்ததை விட இரு மடங்கு பணத்தை செலுத்த வேண்டி வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

எம்.ராஜேஷ் அடுத்த படத்தில் தனுஷ்: ஆச்சரிய அறிவிப்பு!

பிரபல இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் திரைப்படம் ஒன்றின் தகவல் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக நடிக்க 'பிகில்' படத்தில் நடித்த அம்ரிதா ஐயர்

சித்ரா கணவர் ஹேமந்த் ஜாமீன் மனு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனியார் ரிசார்ட் ஒன்றில் தற்கொலை செய்து கொண்ட தகவல் சின்னத் திரை உலகை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரிந்ததே 

'அயலான்' படத்தின் சூப்பர் அப்டேட்: சிவகார்த்திகேயன் ரசிகர்கள் குஷி!

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'டாக்டர்' மற்றும் 'அயலான்' ஆகிய இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

வேற லெவல் புகைப்படம் வெளியிட்ட பிக்பாஸ் நடிகை… குவியும் லைக்ஸ்!

“தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்“ படத்தில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார்.

கொரோனா வைரஸால் கை விரல்கள் அழுகிய கொடூரம்…. இன்னும் சில பகீர் தகவல்கள்!

கொரோனா வைரஸ் பாதிப்பினால் இதயத்தில் கோளாறு, சிறுநீரகப் பாதிப்பு, ஏன் மூளையில் கூட பாதிப்பு ஏற்படுகிறது என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தி இருந்தனர்.