இரட்டை குழந்தைகள் இறந்த நிலையில் விவசாயிக்கு கொரோனா!!! மனஅழுத்தத்தால் ஏற்பட்ட விபரீதம்!!!

  • IndiaGlitz, [Monday,August 31 2020]

 

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவமனைக் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விசாரணையில் அவர் ஒரு விவசாயி என்றும் கடந்த வாரத்தில் அருவடைய இரட்டைக் குழந்தைகள் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்து விட்டனர் என்றும் தெரிய வந்துள்ளது.

இரட்டைக் குழந்தைகள் இறந்த சோகத்தில் இருந்தவருக்குத் திடீரென்று கொரோனா உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது. இதனால் எலுரு பகுதியில் உள்ள ஆசிரம் கொரோனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் அவர் மனஅழுத்ததின் காரணமாக மருத்துவமனைக் கட்டிடத்தில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இச்சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் உலகமே அரண்டு போயிருக்கிறது. பலரது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மனிதர்களின் தூங்கும் நேரம் முற்றிலும் குறைந்து இருப்பதாக மருத்துவ அறிக்கை குறிப்பிடுகிறது. இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மேலும் அதிக மன அழுத்தம் ஏற்படுவதாகவும் இதனால் சிலர் விபரீத முடிவுகளை எடுத்து விடுதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் மனநல பாதுகாப்பு அளிக்கும் வகையில் கொரோனா நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு கூடுதல் கவனிப்பும் சிகிச்சையும் தேவை என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

இபாஸ் ரத்து, மெட்ரோ ரயில், பேருந்து இயங்கும்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புகள்

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இபாஸ் கண்டிப்பாக தேவை என்ற நடைமுறை இருந்த நிலையில், சற்று முன் வெளியான அறிவிப்பில் தமிழகத்தில் மாவட்டங்க

பிகினி உடையை பிறந்த நாள் பரிசாக கொடுத்த பிரபல நடிகை! குவியும் கண்டனங்கள்

பிரபல நடிகை ஒருவர் தனது 12 வயது மகளுக்கு பிகினி உடையை பிறந்தநாள் பரிசாக கொடுத்து, அந்த உடையில் விதவிதமான புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளது

பைக், செல்போன் வாங்குவதற்காக 3 மாத குழந்தையை விற்ற தந்தை: அதிர்ச்சி தகவல்

ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காக தந்தையே தனது மூன்று மாத குழந்தையை ரூ. 1 லட்சத்துக்கு விற்ற சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டு வாசலில் வைஃபை யூசர்நேம், பாஸ்வேர்டை எழுதி வைத்த கலை இயக்குனர்: ஆனால் ஒரு சிக்கல்!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல கலை இயக்குனர் தனது வீட்டு சுவற்றில் தன்னுடைய வைஃபை யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட்களை எழுதி ஒட்டி வைத்திருக்கிறார்

எந்த கட்சியில் சேரப்போகிறார் சத்யராஜ் மகள்? அவரே அளித்த பேட்டி!

பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணர் என்பதும் அவர் சமீபத்தில் ஒரு இயக்கம் ஆரம்பித்தார் என்பதும் அந்த இயக்கத்தின் பெயர் 'மகிழ்மதி இயக்கம்'