டேட்டா லீக் எதிரொலி: ஃபேஸ்புக்கில் இருந்து விலகினார் பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Tuesday,March 27 2018]

சமீபத்தில் ஃபேஸ்புக் பயனாளிகளின் டேட்டாக்கள் இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ச் அனாலிட்டிக்ஸ் நிறுவனத்தால் திருடப்பட்டு அவை அமெரிக்க அதிபர் தேர்தலில் பயன்படுத்தப்பட்டதாகவும், டிரம்பின் வெற்றிக்கு இது பெரிதும் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. சுமார் 50 மில்லியன் ஃபேஸ்புக் பயனாளிகளின் ரகசியங்கள் லீக் ஆனதால் ஃபேஸ்புக்கில் இருந்து விலக வேண்டிய நேரம் வந்துவிட்டதாக பல பிரபலங்கள் கருத்து தெரிவித்தனர்

இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் பர்ஹான் அக்தார் தனது வெரிபைடு ஃபேஸ்புக் கணக்கை டெலிட் செய்துவிட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது: என்னுடைய பர்சனல் ஃபேஸ்புக் கணக்கை டெலிட் செய்துவிட்டேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன். இருப்பினும் பர்ஹான் அக்தார் லைவ் பக்கம் மட்டும் எப்போதும் போல் இயங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் உரிமையாளர் மார்க், டேட்டாக்கள் லீக் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து, இனிமேல் இதுபோன்று நடக்காது என்று உறுதி அளித்தபோதிலும்  பிரமுகர்கள் மட்டுமின்றி சாதாரண பயனாளிகள் பலரும் ஃபேஸ்புக்கில் இருந்து விலகி வருகின்றனர். ஃபேஸ்புக் சமூக வலைத்தள பக்கத்திற்கு இதுவொரு மிகப்பெரிய பின்னடவு என்றே கூற  வேண்டும்

More News

தமிழ் நடிகைக்கு சாமியார் அளித்த பரிசு

இந்தியாவின் அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் சமீபத்தில் பேரணி ஒன்றை நடத்தினார்.

கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு: காவிரி மேலாண்மை வாரியத்திற்கு சிக்கலா?

கர்நாடகா மாநிலத்தின் சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைதால், இன்று அம்மாநிலத்தின் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.

கோடை விடுமுறையை குறிவைக்கும் விஜய்சேதுபதியின் படம்

அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடித்து வரும் நிலையில் பிரபல நடிகர் விஜய்சேதுபதி ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஐந்து படங்களில் நடித்து வருகிறார்

அடுத்த தலைமுறை இளைஞர்களின் டிரெண்டுக்கு மாறிய சுனைனா

கோலிவுட் திரையுலகில் தற்போது தயாரிப்பாளர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதால் தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

தாடி பாலாஜி குடும்பத்தை இணைக்க சிம்பு எடுத்த முயற்சி

தாடி பாலாஜியும், அவருடைய மனைவி நித்யாவும் சமீபத்தில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நித்யா தனது கணவர் பாலாஜி மீது போலீஸ் புகார் கொடுக்க வழக்கு விசாரணையில் உள்ளது.