ரூ.100 கோடி வசூல் செய்தும் அவமரியாதை.. அனுபமாவை மேடையில் இருந்து இறங்க சொன்ன ரசிகர்கள்..!

  • IndiaGlitz, [Friday,April 12 2024]

நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்த திரைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்த நிலையில் அவர் சமீபத்தில் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில் அவரை மேடையில் இருந்து கீழே இறங்கச் சொல்லி ரசிகர்கள் கோஷமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் 29ஆம் தேதி சித்து மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்த ’தில்லு ஸ்கொயர்’ என்ற தெலுங்கு திரைப்படம் வெளியானது. இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்ததாகவும் தெரிகிறது. இருப்பினும் இந்த படத்தில் லிப் கிஸ் முத்தம் உள்பட பல கிளாமர் காட்சிகளில் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அனுபமா பரமேஸ்வரன் கலந்து கொண்ட நிலையில் அவர் மேடைக்கு பேச வந்த போது ரசிகர்கள் திடீரென அவரை மேடையில் இருந்து கீழே இறங்குமாறு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ’நான் பேச வேண்டாமா’ என்று அனுபமா கேட்க, ’வேண்டாம்’ என்று ரசிகர்கள் கோஷமிட்டனர். இரண்டு நிமிடம் மட்டும் பேசிக்கொள்கிறேன் என்று கூறிய போது கூட ’முடியாது பேச வேண்டாம்’ என்று எதிர்ப்புக்குரல் கொடுத்ததால் அனுபவமா அதிர்ச்சி அடைந்தார்.



இதனை அடுத்து அவர் அந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஜூனியர் என்டிஆருக்கு மட்டும் நன்றி சொல்லிவிட்டு அவர் மேடையில் இருந்து இறங்கினார். ரசிகர்களின் இந்த செயலை பல தெலுங்கு திரை உலக பிரபலங்கள் கண்டித்து வருகின்றனர்.