close
Choose your channels

'தேவாரா' படம் பார்த்த ரசிகர்கள் தியேட்டரிலேயே மரணம்.. என்ன காரணம்?

Sunday, September 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜூனியர் என்டிஆர் நடித்த ’தேவாரா’ என்ற திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி, பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இந்தப் படத்தை தியேட்டரில் பார்த்த ரசிகர் ஒருவர் திடீரென மரணம் அடைந்தது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில், அனிருத் இசையமைப்பில் உருவாகிய ’தேவாரா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் உலகமெங்கும் நேற்று முன்தினம் வெளியானது.

இந்தப் படம் பரந்த அளவிலான வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாளில் ரூ.172 கோடி, இரண்டு நாட்களில் ரூ.270 கோடியும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படம் தெலுங்கு திரையுலகில் புதிய வசூல் சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் நிலையில் நேற்று ஐதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் ’தேவாரா’ படத்தை பார்த்து கொண்டிருந்த ரசிகர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை அருகில் இருந்தவர்கள் அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மரணமடைந்து விட்டதாக அறிவித்தனர். இந்தச் செய்தி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

’தேவாரா’ படம் பார்த்து கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனாலேயே அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment