இளம் ரசிகையின் கையை விஜய் பிடித்தது ஏன்?

  • IndiaGlitz, [Wednesday,May 09 2018]

சமீபத்தில் சென்னையில் விஜய் தன்னுடைய ரசிகர்களை சந்தித்தபோது கேரளாவை சேர்ந்த ஏராளமான விஜய் ரசிகர்கள் அவரை பார்க்க வருகை தந்திருந்தனர். அவர்களில் ஒருவர் சரண்யா விசாக். இந்த சந்திப்புக்கு பின்னர் இவர் தன்னுடைய முகநூலில் விஜய்யுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவு செய்திருந்தார். அந்த புகைப்படத்தில் விஜய், அந்த பெண்ணின் கையை பிடித்திருந்தது போல் இருந்தது

இந்த புகைப்படம் குறித்து ஒருசிலர் விமர்சித்து வந்த நிலையில் சரண்யா விசாக் தன்னுடைய முகநூலில் செய்திருந்த பதிவு இதற்கு விடையாக அமைந்தது. அவர் தன்னுடைய முகநூலில் கூறியதாவது: 

விஜய் அண்ணாவின் முகம் என் மனதில் பதிந்துள்ளது. அவரை பார்க்கவோ, பேசவோ முடியாது என்று நினைத்தேன். எனக்கு எல்லோரையும் விட விஜய் அண்ணனை தான் மிகவும் பிடிக்கும். விஜய் அண்ணா மீது நான் வைத்திருக்கும் பாசத்தை பார்த்து பலரும் என்னை கிண்டல் செய்தது உண்டு. நான் விஜய் அண்ணாவை பார்க்கவே முடியாது என்றார்கள். இதோ பார்த்துவிட்டேன். அவரை பார்த்ததும் மகிழ்ச்சியில் உறைந்துவிட்டேன். பின்னர் உங்கள் கையை தொடலாமா என்று கேட்டேன். அவரும் சிரித்தபடியே கை கொடுத்தார், கேமராவுக்கு போஸ் கொடுக்குமாறு கூறினார். அவருக்கு நான் பிறந்தநாள் வாழ்த்து கூற ரொம்ப நன்றிமா கண்டிப்பா சாப்பிட்டுப் போங்க என்றார். என் கனவு நிறைவேறிவிட்டதே என அவர் தனது முகநூலில் பதிவு செய்திருந்தார். இந்த பதிவு விஜய்யை விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடியாக அமைந்தது.

More News

சிவாஜி வீட்டு மருமகள் ஆகின்றாரா பிக்பாஸ் சுஜா?

நடிகை சுஜா தமிழில் ஒருசில படங்களில் நடித்திருந்தாலும், கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலம் அடைந்தார்.

சாவித்ரியை மீண்டும் உயிருடன் கொண்டு வந்துவிட்டார் கீர்த்தி சுரேஷ்: பிரமாண்ட இயக்குனர் பாராட்டு

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 'மகாநதி என்ற திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் தமிழ்ப்பதிப்பான 'நடிகையர் திலகம்' திரைப்படம் வரும் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது.

காலா போன்ற காளான்கள் காணாமல் போகும்: அமைச்சர் ஜெயகுமார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை திரையுலகை சேர்ந்த சிலரும், அரசியல்வாதிகளும் கடந்த சில மாதங்களாக கடுமையாக விமர்சனம் செய்து வருவது தெரிந்ததே.

'இரும்புத்திரை'யில் ஆதார் ஆபத்து குறித்த காட்சிகளா? இயக்குனர் மித்ரன் விளக்கம்

பி.எஸ்.மித்ரன் இயக்கிய 'இரும்புத்திரை' திரைப்படம் வரும் வெள்ளி அன்று வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் முதல் பாதி மட்டும் இன்று பத்திரிகையாளர்களுக்காக திரையிடப்பட்டது.

ரஜினியிடம் ஆயிரம் குறைகள் இருக்கலாம், ஆனால் உண்மை இருக்கு: வைகோ

ரஜினிகாந்த் வெகுவிரைவில் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியல் களத்தில் குதிக்கவுள்ளார். அவருடைய அரசியல் அறிவிப்பு இன்று நடைபெறும் 'காலா' இசை வெளியீட்டு விழாவில் கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.