மிகப்பெரிய அவமானம்.. ஏண்டா நடிச்சோம்ன்னு இருக்கு: 'எதிர்நீச்சல்' சீரியல் குறித்து வேல ராமமூர்த்தி..!

  • IndiaGlitz, [Sunday,June 16 2024]

’எதிர்நீச்சல்’ சீரியலில் ஜி. மாரிமுத்து கொண்டிருந்த நிலையில் அவர் திடீரென காலமானதால் அவரது குணசேகரன் கேரக்டரில் வேல ராமமூர்த்தி நடித்த நிலையில் தற்போது அந்த சீரியல் முடிந்த பின்னர் இந்த சீரியலில் ஏண்டா நடிச்சோம்ன்னு இருக்கு என்று அவர் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பான ’எதிர்நீச்சல்’ சீரியல் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த சீரியல் முடிந்ததை நினைத்து சீரியல் குழுவினர் பெரும் கவலையுடன் உள்ளனர். இந்த சீரியல் குறித்து தங்களது மலரும் நினைவுகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சீரியலில் குணசேகரன் என்ற முக்கிய கேரக்டரில் நடிகர் ஜி மாரிமுத்து நடித்த நிலையில் அவருக்கு அந்த கேரக்டர் கச்சிதமாக பொருந்தியது. ஆனால் அவர் திடீரென மாரடைப்பால் காலமான நிலையில் அவருக்கு பதிலாக குணசேகரன் கேரக்டரை வேல ராமமூர்த்தி ஏற்று நடித்தார். ஜி மாரிமுத்து அளவுக்கு இல்லை என்றாலும் அந்த கேரக்டரை ஓரளவுக்கு புரிந்து கொண்டு அவர் நடித்த நிலையில் தான் திடீரென இந்த சீரியல் முன்னறிவிப்பு இன்றி முடிக்கப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த வேல ராமமூர்த்தி ’எதிர்நீச்சல்’ சீரியலுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது, இந்த சீரியல் தொடங்கியது முதல் முடியும் வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது, இந்த சீரியல் அடக்குமுறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

ஆனால் அதே நேரத்தில் இந்த சீரியலில் ஏண்டா நடிச்சோம்ன்னு எனக்கு இருக்கிறது, மிகப்பெரிய அவமானமாகவே நான் இந்த சீரியலில் நடித்ததை கருதுகிறேன், கடைசிவரை என்னுடைய கேரக்டர் ரசிகர்களுக்கு பிடிக்கவே இல்லை’ என்று வேதனையுடன் தெரிவித்தார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.