'எதிர்நீச்சல்' முடிந்ததும் சொந்த தொழில் ஆரம்பித்த நடிகை.. நெட்டிசன்கள் வாழ்த்து..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
சன் டிவியில் ஒளிபரப்பான ’எதிர்நீச்சல்’ சீரியல் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென முடிவடைந்த நிலையில் இந்த சீரியலில் நடித்த நடிகை சொந்தமாக தொழில் தொடங்கி விட்டதாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்து தனக்கு ஆதரவு தரும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
சன் டிவியில் திருச்செல்வம் இயக்கத்தில் உருவான ’எதிர்நீச்சல்’ என்ற சீரியல் டிஆர்பியில் நல்ல ரேட்டிங் பெற்றுக் கொண்டிருந்த நிலையில் தான் திடீரென குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்த ஜி மாரிமுத்து காலமானார். அவரது கேரக்டரில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்த நிலையில் அதன் பின்னரும் அந்த சீரியல் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது.
இதனை அடுத்து எதிர்பாராத விதமாக திடீரென அந்த சீரியல் முடிக்கப்பட்டது என்பதும் சமீபத்தில் தான் இந்த சீரியல் கிளைமாக்ஸ் ஒளிபரப்பானது என்பதை தெரிந்தது. இருப்பினும் இந்த சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் எதிர்நீச்சல் சிரியலில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்த நடிகை ஹரிப்பிரியா இசை, நடன பள்ளியை தொடங்கி உள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். சென்னையில் இரண்டு இடங்களில் இசை நடனப் பள்ளியை ஆரம்பித்ததாகவும் நேரில் மற்றும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். ’எதிர்நீச்சல்’ சீரியல் முடிந்ததும் அவர் சொந்த தொழில் ஆரம்பித்துள்ளதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.