'எதிர்நீச்சல் 2' சீரியலில் மதுமிதாவுக்கு பதில் இவரா? ஜனனி கேரக்டரை காப்பாற்றுவாரா?

  • IndiaGlitz, [Saturday,October 19 2024]

'எதிர் நீச்சல்’ சீரியல் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இதில் நடிக்கப் போவதில்லை என ஜனனி கேரக்டரில் நடித்த மதுமிதா அறிவித்திருந்தார். இந்த நிலையில், இந்த கேரக்டரில் நடிக்கும் நடிகை குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பான 'எதிர் நீச்சல்’ சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், திடீரென இந்த சீரியல் முடிவுக்கு வந்தது, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், இந்த சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படும் நிலையில், சமீபத்தில் ஜனனி கேரக்டரில் நடித்த மதுமிதா ’எதிர்நீச்சல் 2’ சீரியலில் தான் நடிக்கவில்லை என்று கூறியிருந்தார். வேறொரு சீரியல் அல்லது திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் தான் அவர் ’எதிர்நீச்சல் 2’ சீரியலில் நடிக்கவில்லை என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், ஜனனி கேரக்டரில் யார் நடிப்பார் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தற்போது பார்வதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சன் டிவியில் விஜேவாக இருந்த அவர், ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ’புது புது அர்த்தங்கள்’ சீரியலில் தேவயானி மருமகளாக நடித்திருந்தார். அந்த சீரியல் முடிவுக்கு பின்னால், ஒரு சில சீரியலில் கெஸ்ட் ரோலில் மட்டும் நடித்த பார்வதி, தற்போது ’எதிர்நீச்சல் 2’ சீரியலில் ஜனனி கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஜனனி கேரக்டரில் நடிக்க பார்வதி மிகவும் பொருத்தமானவர் என்று, இந்த செய்திக்கு ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

More News

நிறுத்தும்மா.. அப்படி சொல்லாதே.. சாய்பல்லவியால் கடுப்பான சிவகார்த்திகேயன்..!

நேற்று நடந்த 'அமரன்' இசை வெளியீட்டு விழாவில் 'நடிகை சாய் பல்லவி தன்னை அண்ணா என்று அழைத்ததாகவும், அதனால் தான் கடுப்பானதாகவும்,  நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

மும்பையில் சூர்யாவை சர்ப்ரைஸ் ஆக சந்தித்த பிரபல நடிகை..  வைரல் வீடியோ..!

சூர்யாவுடன் ஒரே ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்த பிரபல நடிகை, தற்செயலாக தனது கணவர் மற்றும் குழந்தையுடன் மும்பை விமான நிலையத்தில் இருக்கும் போது அங்கு வந்த சூரியாவை சந்தித்தார்.

தீபாவளி விருந்து: 'விடாமுயற்சி' வருகிறதோ இல்லையோ, இந்த 2 படங்களும் உறுதி..!

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தினத்தில் மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும். ஆனால், இந்த ஆண்டு ரஜினிகாந்த், கமலஹாசன்,

சிறைக்கைதியாக ஆர்ஜே பாலாஜி.. 'சூர்யா 45' படப்பிடிப்பு எப்போது?

சூர்யா நடிக்க இருக்கும் 45வது திரைப்படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்க இருக்கிறார் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியான ஆர்ஜே பாலாஜி நடிக்கும் ஒரு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

'கோட்' படம் பார்த்த ரஜினிகாந்த்.. என்ன சொன்னார் தெரியுமா? வெங்கட் பிரபு நெகிழ்ச்சி..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து பாராட்டியதை அடுத்து, இயக்குனர் வெங்கட் பிரபு நிகழ்வுடன் தனது சமூக வலைத்தளத்தில் செய்த பதிவு