'எந்திரன்' கதை திருட்டு வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

  • IndiaGlitz, [Saturday,June 17 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான 'எந்திரன்’ படத்தின் கதை தன்னுடையது என ஆரூர் தமிழ்நாடன் என்பவர் தாக்கல் செய்த வழக்கின் அதிரடி உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்ட நிலையில் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எழுத்தாளரும் கவிஞருமான ஆரூர் தமிழ்நாடன் என்பவர் ’எந்திரன்’ படத்தின் கதை தன்னுடைய ’ஜிகுபா’ என்ற கதையிலிருந்து திருடப்பட்டது என்று கடந்த 1996 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பில் மனுதாரரின் கதைக்கும் 'எந்திரன்’ படத்தின் கதைக்கும் அதிக அளவு வேறுபாடுகள் இருப்பதாகவும் இதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் கூறினார். மேலும் வழக்கின் செலவையும் மனுதாரர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து நீண்ட காலமாக இருந்து வந்த 'எந்திரன்’ படத்தின் கதை திருட்டு பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான 'எந்திரன்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் உள்பட பலர் நடித்திருந்தனர். இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பலாத்காரம் செய்த குற்றவாளியுடன் சமரசத்திற்கு வாய்ப்பு இருக்கா? நீதிபதியே கேள்வி?

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருக்கும் நிலையில் கர்ப்பத்தை கலைப்பதற்கு ஒப்புதல் கேட்டு அவரது பெற்றோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில்

முதலில் வந்தது கோழியா? முட்டையா? மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

நம்மூரில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் காலம் காலமாக கேட்கப்பட்டு வரும் ஒரு முக்கிய கேள்வி, கோழியில் இருந்து முட்டை வந்ததா? அல்லது முட்டையில் இருந்து கோழி வந்ததா? என்பதுதான்.

திடீரென விஜய்க்கு கண்டனம் தெரிவித்த அன்புமணி.. 'லியோ'வுக்கு சிக்கலா?

விஜய் நடித்த 'லியோ' படத்தின் புதிய போஸ்டர் நேற்று வெளியானது என்பதும் விஜய்யின் பிறந்தநாளில் 'நான் ரெடி' என்ற பாடல் வெளியாகும் என்ற அறிவிப்புடன் வெளியான அந்த போஸ்டருக்கு பாமக தலைவர்

மீண்டும் தொடங்கும் 'தங்கலான்' படப்பிடிப்பு.. விக்ரமுடன் யார் இணைகிறார் தெரியுமா?

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஹிருத்திக் ரோஷன் - ஜூனியர் என்.டி.ஆரின் 'வார் 2' படத்தில் இணைந்த ஷங்கர் பட நாயகி..!

ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் 'வார் 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஷங்கர் படத்தின் நாயகி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.