'2.0' படப்பிடிப்பு முடிவது எப்போது?

  • IndiaGlitz, [Wednesday,March 23 2016]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக டெல்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பை அடுத்து படக்குழுவினர் மொராக்கோ நாட்டில் படப்பிடிப்பு நடத்தவுள்ளதாக செய்திகள் கூறுகின்றது.


இந்நிலையில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் வரும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளதாகவும், இந்த படத்தில் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகள் மிக அதிகம் இருப்பதால் அதில் கவனம் செலுத்த அவருக்கு அதிக நாட்கள் தேவைப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படம் வரும் 2017ஆம் ஆண்டு ஏப்ரலில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அக்டோபருக்கு பின்னர் இருக்கும் ஆறு மாத காலமும் இந்த படத்தின் சிஜி பணிகள் உள்பட போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

More News

விஜய்-சூர்யா-சிம்புவுடன் இணைந்தார் ஜி.வி.பிரகாஷ்

வரும் மே மாதம் தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வருவதால் ஏப்ரல் மாதமே பெருவாரியான திரைப்படங்களை ரிலீஸ் செய்ய கோலிவுட் திரையுலகினர்...

விஜய்யின் 'தெறி' மலையாள படமா?

இளையதளபதி விஜய்யின் 'தெறி' படத்தின் பாடல்களும், டிரைலர்களும் மாபெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில்...

விஷால் செய்த உயிர்காக்கும் உதவி

நடிகர் விஷால் நடிகர் சங்கத்தின் மூலமும், தனது சொந்த பணத்திலும் பல உதவிகள் செய்து வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதை பார்த்து வருகிறோம்...

கலாபவன் மணி மரணத்தில் திடீர் திருப்பம்

கலாபவன் மணி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவரது மரணம் இயற்கைக்கு மாறானது...

சிம்புவுடன் இணைவார்களா விஜய்சேதுபதி, ஜீவா?

லில் விஜய்யின் 'தெறி' மற்றும் சூர்யாவின் '24' ஆகிய படங்கள் மற்றும் மே மாதத்தில் ரஜினியின் 'கபாலி' போன்ற பெரிய படங்கள் ரிலீஸ் ஆகும்...