காமன்வெல்த் மைதானத்தில் வீராங்கனைக்கு காதல் புரபோஸ் செய்த வீரர்

  • IndiaGlitz, [Monday,April 09 2018]

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை பெற்று வரும் நிலையில் மைதானத்தில் ஒரு ஜோடிக்கும் கிட்டத்தட்ட நிச்சயம்தார்த்தமே ஆகிவிட்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று ஸ்பேனிஷ் டீம் பேஸ்கட்பால் விளையாட்டு வீரர் ஆண்டர்சன் என்பவர் மைதானத்தில் போட்டியில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் தனது சக வீரர்களுடன் நின்றிருந்தார். அப்போது மான்சென்ஸ்டர் பெண்கள் டீமில் விளையாடி வரும் ஜோன்ஸ் அங்கு வரவழைக்கப்பட்டார். அவர் வந்ததும் அவரிடம் தனது காதலை புரபோஸ் செய்தார் ஆண்டர்சன். ஏற்கனவே இருவரும் நல்ல நண்பர்கள் என்றாலும், திடீரென ஆண்டர்சன் காதல் புரபோஸ் செய்தது ஜோன்ஸை இன்ப அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. பின்னர் ஒருவாறு சுதாரித்து கொண்டு ஆண்டர்சன் காதலை ஏற்றுக்கொண்டார். 

சுற்றி நின்றிருந்த நண்பர்களின் ஆரவாரத்துடன் ஆண்டர்சன் கொடுத்த நிச்சயதார்த்த மோதிரத்தை ஜோன்ஸ் பெற்றுக்கொண்டு அவரை கட்டிப்பிடித்து கொண்டார்.

நான் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றும், அவர் என்னை புரபோஸ் செய்தவுடன் எனக்கு என்ன பதில் சொல்வது என்று ஒரு நிமிடம் தெரியவில்லை என்றும் ஜோன்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த நிச்சயதார்த்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

சென்னையில் மனைவியை கொலை செய்துவிட்டு கோவில் குருக்கள் ஆடிய நாடகம்

சென்னை வடபழனி சிவன் கோவிலில் அர்ச்சகராக பணிபுரியும் குருக்கள் ஒருவர் தனது மனைவியை நண்பருடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழிசை என்னை பார்த்து பயப்பட வேண்டாம்: சத்யராஜ் பதிலடி

நடிகர் சங்கம் சார்பில் நடந்த அறப்போராட்டத்தின் இறுதியில் நடிகர் சத்யராஜ் ஆவேசமாக பேசினார். அதில் குறிப்பாக ராணுவமே வந்தாமல் பயப்பட மாட்டோம், காவிரி மேலாண்மை வாரியத்திற்கு தமிழராக குரல் கொடுப்போம்

40 ஆண்டுகளுக்கு முன் நாங்கள் நினைத்திருந்தால்? ரஜினியை சீண்டிய தமிழிசை

'40 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழர்கள், கர்நாடகாவை சேர்ந்தவரை நடிகராக ஏற்க மாட்டோம் என நினைந்திருந்தால் நீங்கள் சூப்பர் ஸ்டார் ஆகியிருக்க முடியுமா?

காவிரி பிரச்சனை குறித்து சிம்புவின் ஆவேச பேட்டி

காவிரி மேலாண்மை அமைப்பதற்குநடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் சிம்பு கலந்து கொள்ளவில்லை. இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் சிம்பு செய்தியாளர்களை சந்தித்தார்.

காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம் மற்றும் 1 வெள்ளி

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் டேபிள் டென்னிஸ் போட்டியில் சிங்கப்பூரை வீழ்த்தி இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது.