ஆர்யாவின் மணமகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்

  • IndiaGlitz, [Friday,May 25 2018]

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் ஆர்யாவுக்கு பெண் தேடும் நிகழ்ச்சியான 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிகழ்ச்சியில் பலகட்டப் பரிசீலனைக்குப் பிறகு 16 இளம்பெண்கள் தேர்வு செய்யப்பட்டு கலந்து கொண்டனர். எதிர்பார்த்தபடியே இவர்களில் யாரையும் மணமகளாக ஆர்யா தேர்வு செய்யப்படவில்லை. இருப்பினும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் அனைவரும் தமிழகம் முழுவதும் புகழ் பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 பேர்களில் ஒருவரான அபர்ணதி என்பவருக்கு தற்போது அதிர்ஷ்டம் அடித்துள்ளது. ஆம், பிரபல இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கவுள்ள திரைப்படத்தில் நடிக்க அபர்ணதி ஒப்பந்தமாகியுள்ளார். இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும், இந்த படப்பிடிப்பில் ஜிவி பிரகாஷ், அபர்ணதி உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ளவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் 'பள்ளி பருவத்திலே' படத்தின் நடித்த நந்தன் ராம் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்தில் ஜெனிபர், மணிமேகலை, 'பாகுபலி' பட புகழ் பிரபாகர் உள்பட பலர் நடிக்கவுள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்துக்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார்.
 

More News

தூத்துகுடியில் மெல்ல திரும்பும் இயல்பு நிலை: கடைகள் திறப்பு, போக்குவரத்து ஆரம்பம்

தூத்துகுடியில் நடைபெற்ற துப்பாக்கி சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக பலியான நிலையில் அம்மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக பதட்ட நிலை இருந்தது.

விக்ரமை மீண்டும் பாட வைப்பாரா தேவிஸ்ரீ பிரசாத்

சீயான் விக்ரம் ஒரு சிறந்த நடிகர் மட்டுமின்றி டப்பிங் கலைஞர் மற்றும் பாடகர் என்பது பலர் அறிந்ததே

ரஜினியுடன் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்? விஜய்சேதுபதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார். 

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம்: அனில் அகர்வால்

தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மூன்று மாதங்களாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

ஸ்டெர்லைட் போராட்டத்தால் தனுஷுக்கு ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத  இழப்பு

தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 100 நாட்களுக்கும் மேல் அந்த பகுதி மக்கள் தொடர்ச்சியாக போராடி வரும் நிலையில் நேற்று முன் தினம் இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது.