முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

  • IndiaGlitz, [Saturday,January 13 2018]

முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான ப.சிதமரம் வீட்டில் இன்று காலை முதல் வருமான அமலாக்கத்துறை அதிகாரிகL சோதனை செய்து வருகின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரம்  இல்லத்திலும், அவரது சொந்த ஊரான காரைக்குடியில் உள்ள வீட்டிலும் இன்று காலை 7.30 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

மேலும் ப.சிதம்பரத்தின் மகன்  கார்த்தி சிதம்பரம் வீடு மற்றும் அலுவலகங்களிலும் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அந்நிய நேரடி முதலீட்டுக்கான அனுமதியை சட்டவிரோதமாகப் பெற உதவியதாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு குறித்த விசாரணைக்காக  ஜனவரி 11-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் கார்த்திக் சிதம்பரம் அன்றைய தேதியில் ஆஜராகவில்லை என்பதால் அதுதொடர்பாகவே இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கின்றன. .

More News

முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு பெரியார் விருது: தமிழக அரசு அறிவிப்பு

தந்தை பெரியார் விருதை முன்னாள் அமைச்சரும், தற்போதைய தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான பா.வளர்மதிக்கு வழங்கப்படுகிறது.

இனி விதைப்பது நற்பயிராகட்டும்: கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து

உலக தமிழர்கள் அனைவரும் நாளை பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட தயாராகி வரும் நிலையில் அரசியல் தலைவர்கள் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் ராக்கர்ஸ் அட்மினுக்கு விக்னேஷ்சிவன் வேண்டுகோள்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்திசுரேஷ் நடிப்பில் நேற்று வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் நல்ல ரிசல்ட்டை பெற்று திரையரங்குகளில் வெற்றி நடைபோடுகிறது.

முடிவுக்கு வந்தது அஞ்சலியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு

அஞ்சலி நடித்த் 'பலூன்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்து வந்த அடுத்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

வைரமுத்து கருத்தை வைத்து மதக்கலவரமா? மன்சூர் அலிகான் ஆவேசம்

சமீபத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து கூறிய ஒரு கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. பாரதிராஜா உள்பட ஒருசிலரும், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.