close
Choose your channels

ரூ.200 கோடி பண மோசடி வழக்கு: பிரபல நடிகைக்கு அமலாக்கத்துறை சம்மன்..!

Wednesday, July 10, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் ஆஜராக வேண்டும் என்று பிரபல நடிகைக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ் சந்திரசேகர் என்பவர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில், இந்த விவகாரத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் என்பவர் ஆதாயம் பெற்றதாக கூறப்பட்டது. இதன் அடிப்படையில் ஜாக்குலினுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை செய்து வருகிறது.

இந்த நிலையில் பண மோசடி வழக்கு தொடர்பாக ஜாக்குலினை மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் என்றும், அதனால் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. சுகேஷ் சந்திரசேகர் மோசடி செய்த பணத்தில் தான் ஜாக்குலினுக்கு விலையுயர்ந்த பொருள் பரிசளித்ததாக கூறப்படும் நிலையில் இது குறித்து நேரில் அவர் ஆஜராகும் போது விசாரணை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்த வழக்கில் ஜாக்குலின் ஐந்து முறை அமலாக்கத்துறை அதிகாரிகளால் விசாரணை செய்யப்பட்டார் என்பதும் ஒவ்வொரு முறையும் தான் நிரபராதி என்று அவர் கூறி வருவதோடு சந்திரசேகர் குற்றப் பின்னணி குறித்து தனக்கு தெரியாது என்றும் கூறினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் இந்த விசாரணையில் என்ன உண்மை வெளிவரும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment