ரூ.200 கோடி பண மோசடி வழக்கு: பிரபல நடிகைக்கு அமலாக்கத்துறை சம்மன்..!

  • IndiaGlitz, [Wednesday,July 10 2024]

200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் ஆஜராக வேண்டும் என்று பிரபல நடிகைக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ் சந்திரசேகர் என்பவர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில், இந்த விவகாரத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் என்பவர் ஆதாயம் பெற்றதாக கூறப்பட்டது. இதன் அடிப்படையில் ஜாக்குலினுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை செய்து வருகிறது.

இந்த நிலையில் பண மோசடி வழக்கு தொடர்பாக ஜாக்குலினை மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் என்றும், அதனால் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. சுகேஷ் சந்திரசேகர் மோசடி செய்த பணத்தில் தான் ஜாக்குலினுக்கு விலையுயர்ந்த பொருள் பரிசளித்ததாக கூறப்படும் நிலையில் இது குறித்து நேரில் அவர் ஆஜராகும் போது விசாரணை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்த வழக்கில் ஜாக்குலின் ஐந்து முறை அமலாக்கத்துறை அதிகாரிகளால் விசாரணை செய்யப்பட்டார் என்பதும் ஒவ்வொரு முறையும் தான் நிரபராதி என்று அவர் கூறி வருவதோடு சந்திரசேகர் குற்றப் பின்னணி குறித்து தனக்கு தெரியாது என்றும் கூறினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் இந்த விசாரணையில் என்ன உண்மை வெளிவரும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

More News

இந்தியன் - 2 படத்தின் மீதான வழக்கு.. சுபாஷ்கரன், கமல்ஹாசனுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை..!

நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் - 2 படக்குழுவுக்கு மதுரை மாவட்ட உரிமையியல்  நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவில் குருதி பூஜை & ஆன்மீக ரகசியங்கள் - புதுக்கோட்டை நசீம் அம்மா பேட்டி | ஆன்மீகக்ளிட்ஸ்

பிரபல மாந்திரீகர் புதுக்கோட்டை நசீம் அம்மா அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ஆன்மீகம் மற்றும் மாந்திரீகம் சார்ந்த பல கேள்விகளுக்கு தெளிவான விடையளித்துள்ளார்.

சன் டிவியில் புதிய சீரியல்.. ஒளிபரப்பாகும் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு..!

சன் டிவியில் புதிய சீரியல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு அந்த சீரியல் தொடங்கும் தேதி மற்றும் நேரம் குறித்த அறிவிப்பும் வீடியோவுடன் வெளியாகி உள்ளது.

ஜிவி பிரகாஷ் பிரிவுக்கு பின் பாடகி சைந்தவி எடுத்த அதிரடி முடிவு.. என்ன செய்தார் தெரியுமா?

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் சமீபத்தில் தனது மனைவி சைந்தவியை பிரிவதாக அறிவித்தது திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கௌதம் மேனன் அடுத்த படத்தின் பூஜை.. நாயகன் கன்பர்ம்.. நாயகி இவரா இருக்குமோ?

பிரபல இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில் பூஜை குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.