என்பார்மிங் முடிந்தது: துபாய் விமான நிலையத்தில் ஸ்ரீதேவி உடல்

  • IndiaGlitz, [Tuesday,February 27 2018]

துபாயில் மரணம் அடைந்த ஸ்ரீதேவி உடல் துபாய் போலீசாரின் அனைத்து விசாரணை நடவடிக்கைகளும் முடிந்துவிட்ட நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்பு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து ஸ்ரீதேவியின் உடல் என்பார்மிங் செய்யப்பட்டு சற்றுமுன்னர் துபாய் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு தயாராக இருக்கும் அம்பானி அவர்களின் தனி விமானத்தில் ஸ்ரீதேவியின் உடல் ஏற்றப்பட்டு இன்னும் ஒருசில மணி நேரங்களில் மும்பைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

மும்பையில் ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதால் அவரது உடல் வந்து சேர்ந்ததும் விஐபிக்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்படும் பின்னர் அவரது உடல் முறைப்படி தகனம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

 

More News

கவுதமி சம்பள பாக்கி குறித்து கமல் கருத்து

கமல்ஹாசன் நடித்த தசாவதாரம், விஸ்வரூபம் ஆகிய படங்களில் தான் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியதாகவும், அதற்கான சம்பளத்தை கமல்ஹாசனின் நிறுவனம் தனக்கு தரவில்லை என்றும் சமீபத்தில் கவுதமி புகார் கூறியிருந்தார்.

ரஷ்ய தொழிலதிபருடன் ரஜினி-விஜய் நாயகிக்கு திருமணம்

பிரபல தென்னிந்திய நடிகையும், ரஜினி, விஜய், தனுஷ் உள்பட முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட்டவருமான நடிகை ஸ்ரேயாவுக்கு வரும் மார்ச் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது. அவருக்கு நமது அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள்

ஸ்ரீதேவி மரணம் குறித்து சந்தேகம் எழுப்பும் சுவாமி

ஸ்ரீதேவி மரணம் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதியா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்

நடிகர் விஷால் அமெரிக்காவின் கலிபோர்னியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு எந்தவிதமான நோய் என்பது தெரியவில்லை என்றும் பல்வேறு வதந்திகள் இணையதளங்களில் கடந்த சிலநாட்களாக பரவி வந்தது

குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி மரணம்: என்ன சொல்கிறது டேட்டா?

பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தபோது மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார் என்று கூறப்பட்டது.