கபாலி' கட்டிங் பணிகள் ஆரம்பம்.

  • IndiaGlitz, [Tuesday,March 01 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அட்டக்கத்தி இயக்குனர் பா.ரஞ்சித் இயகக்த்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் ஆரம்பமாகிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. முதல்கட்டமாக இந்த படத்தை எடிட்டிங் செய்யும் பணியில் எடிட்டர் ப்ரவீண் கே.எல்., ரூபன் மற்றும் இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.


படத்தொகுப்பு பணிகள் முடிவடைந்தவுடன் பின்னணி இசை கோர்ப்பு, டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது.

வயதான கேங்ஸ்டர் வேடத்தில் நடித்துள்ள ரஜினிகாந்த்தின் மனைவியாக ராதிகா ஆப்தேவும் மகளாக தன்ஷிகாவும் நடித்துள்ளனர். மேலும் அட்டக்கத்தி' தினேஷ், 'மெட்ராஸ்' கலையரசன், கிஷோர்குமார் உள்பட பலர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ரஜினியின் படத்திற்கு முதன்முறையாக சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். முரளி ஒளிப்பதிவு செய்துள்ல இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு பெரும் பொருட்செலவில் தயாரித்துள்லார். இந்த படம் வரும் மே மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'ஓகே கண்மணி'யின் இந்தி டைட்டில் என்ன தெரியுமா?

மணிரத்னம் இயக்கத்தில் துல்கார் சல்மான், நித்யாமேனன் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் 'ஓகே கண்மணி'...

'ஜீரோ' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Blueocean Entertaiment தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஜீரோ' என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றத

மிஷ்கின் - விஷால் இணையும் படம் அஞ்சாதே 2?

விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்குவதாக இருந்த சண்டக்கோழி 2' திரைப்படம் டிராப் ஆனதையும், அதற்கு பதிலாக விஷால் நடிக்கவுள்ள அடுத்த படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கவுள்ளதாகவும்...

'ருத்ரம்மாதேவி' பேரன் கதையில் பிரபாஸ்?

அனுஷ்கா, அல்லுஅர்ஜூன், பிரகாஷ்ராஜ், ராணா, நித்யாமேனன் உள்பட பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ருத்ரம்மாதேவி' படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த போதிலும்...

ஏ.ஆர்.முருகதாஸ் நாயகனுடன் இணையும் கவுதம் மேனன்?

அஜித், த்ரிஷா, அனுஷ்கா நடித்த 'என்னை அறிந்தால்' படத்திற்கு பின்னர் சிம்பு நடிப்பில் 'அச்சம் என்பது மடமையடா' படத்தை இயக்கி வரும் இயக்குனர் கவுதம் மேனன், அந்த படத்தை கிட்டத்தட்ட முடித்துவிட்டார்...