close
Choose your channels

சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு!

Monday, May 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து அதிமுக எம்.ல்.ஏக்களின் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு கூட்டப்பட்டது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் நீடித்த நிலையில் தற்போது தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றிப்பெற்றது. இதையடுத்து யார் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பு வகிப்பது என்ற கேள்வியை பலரும் முன்வைத்து வந்தனர். மேலும் இதுதொடர்பாக ஓபிஎஸ் இபிஎஸ் இடையே கடும் போட்டி நிலவுவதாகவும் கூறப்பட்டது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை கடந்த வெள்ளிக்கிழமை முதற்கொண்டே நடைபெற்று வரும் நிலையில் தற்போது ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு எடப்பாடி பழனிசாமி தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment