சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு!

  • IndiaGlitz, [Monday,May 10 2021]

தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து அதிமுக எம்.ல்.ஏக்களின் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு கூட்டப்பட்டது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் நீடித்த நிலையில் தற்போது தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றிப்பெற்றது. இதையடுத்து யார் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பு வகிப்பது என்ற கேள்வியை பலரும் முன்வைத்து வந்தனர். மேலும் இதுதொடர்பாக ஓபிஎஸ் இபிஎஸ் இடையே கடும் போட்டி நிலவுவதாகவும் கூறப்பட்டது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை கடந்த வெள்ளிக்கிழமை முதற்கொண்டே நடைபெற்று வரும் நிலையில் தற்போது ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு எடப்பாடி பழனிசாமி தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

அம்மா, மாமியாருடன் நதியா: அன்னையர் தின ஸ்பெஷல் புகைப்படம்

நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட அனைத்து திரையுலக பிரபலங்களும் தங்கள் அன்னையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்

கொரோனாவுக்கு பலியான மேலும் ஒரு பிரபல நடிகர்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது என்பதும் தினமும் இந்தியாவில் சுமார் 4 லட்சம் பேர்களும் தமிழகத்தில் சுமார் 25 ஆயிரம் பேர்களும்

நடிகர் மன்சூர் அலிகான் சென்னை மருத்துவமனையில் அனுமதி!

கடந்த சில நாட்களாக தமிழ் திரையுலகினர் பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக கொரோனா பாதிப்பு காரணமாக முக்கிய பிரபலங்கள் பலியாகி கொண்டிருப்பது

கொங்கு நாட்டுச் சிங்கம் தீரன் சின்னமலை வரலாறு… கேட்டு மகிழுங்கள் ஆடியோ வடிவில்!

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது கொங்கு பகுதியில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து மக்களின் விடுதலைக்காக நின்ற ஒரு தலைவர் தீரன் சின்னமலை.

சுக்குநூறாக உடையும் மநீம?… நடிகர் கமல்தான் காரணமா? காரசாரமான வீடியோ விளக்கம்!

மாற்றம் என்பதை வலியுறுத்தி கடந்த 2018 பிப்ரவரி மாதத்தில் நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் துவங்கினார்.