கொரோனா எதிரொலி; எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒபேக் நாடுகள் முடிவு!!!

  • IndiaGlitz, [Monday,April 13 2020]

 

கச்சா எண்ணெய் ஏற்றுமதியை முறைப்படுத்தும் நோக்கில் 1960 களில் உருவாக்கப்பட்ட ஒபேக் கூட்டமைப்பில் இதுவரை 14 நாடுகள் உறுப்பு நாடுகளாக இருக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள கச்சா எண்ணெய் உற்பத்தியில் இந்த நாடுகளில் கையிருப்பு அதிகம். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக உலகம் முழுவதுமே லாக்டவுனில் முடங்கியிருக்கிறது. பல நாடுகள் வாகனப்போக்குவரத்துக்கும் தடை விதித்து இருக்கிறது. எனவே கச்சா எண்ணெயின் தேவை பெருமளவு குறைந்திருக்கிறது. தேவை குறைவுக்காரணமாக கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒபேக் நாடுகள் முடிவெடுத்திருக்கின்றன.

மொத்த உற்பத்தியில் 10 விழுக்காடு குறைப்பது என ஒபேக் நாடுகள் நடத்திய வீடியோ கான்ஃபிரஸ் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. வழக்கமாக ஒபேக் நாடுகள் 9.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை ஆண்டு ஒன்றிற்கு உற்பத்தி செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கொரோனா ஆரம்பக் கட்டத்தில் கச்சா எண்ணெய் குறைப்புக்கு அரபு நாடுகள் முடிவெடுத்தன. இதறகு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இந்த வாக்குவாதத்தில் கச்சா எண்ணையின் விலை 30 விழுக்காடு குறைந்தது எனவும் குறிப்பிடத்தக்கது. எனவே கடந்த மார்ச் மாதத்தில் 3,431 ரூபாயக இருந்த ஒரு பேரல் 2,549 ஆக குறைந்தது. இது உலக நாடுகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்டுத்தியது.

தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கச்சா எண்ணெயின் தேவை குறைந்திருக்கிறது. இதைக் கருத்திக்கொண்டு ஒபேக் அமைப்பு தனது மொத்த உற்பத்தில் 10 விழுக்காடு குறைத்து உற்பத்தி செய்ய முடிவெடுத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனா நிலைமை மோசமாவதற்கு அரசியல் அமைப்புகளின் துரோகம்தான் காரணம்!!! நோம் சாம்ஸ்கி குற்றச்சாட்டு!!!

அமெரிக்காவின் தத்துவவியல் நிபுணரும், மொழியியல் அறிஞருமான நோம் சாம்ஸ்கி இந்த உலகம் கொரோனாவை கையாண்ட விதம் தனக்கு அதிர்ச்சி அளிக்கிறது

கொரோனாவுக்கு பிறகு வெளியாகும் முதல் இந்திய திரைப்படம்!

சீனாவிலுள்ள வூகான் என்ற மாகாணத்தில் கொரோனா வைரஸ் தோன்றி, அந்நாட்டில் மட்டுமன்றி உலக நாடுகள் அனைத்திலும் தற்போது பரவியுள்ளது.

எனக்கே சாராயம் இல்லைன்னா எவனும் குடிக்க கூடாது: பிரபல விஜேவின் வீடியோ

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் கடந்த மூன்று வாரங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் எந்தவித திரைப்பட படப்பிடிப்பும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின்

இன்று முதல் அனைத்து வங்கிகளையும் மூட உத்தரவு: அதிரடி அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள அனைத்து வங்கிகளையும் இன்று முதல் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

செல்ஃபி எடுக்க முயன்று 15 நிமிடம் உயிருக்கு போராடிய இளைஞர்!

ஆபத்தான இடங்களில் செல்பி எடுக்க முயன்று பலர் உயிரை இழந்த சம்பவங்களை அடிக்கடி பார்த்து வருகிறோம். இந்த நிலையில் ரஷ்யாவில் இளைஞர் ஒருவர் செல்பி எடுக்க முயன்ற போது மாடியில் இருந்து தவறி விழுந்து