பிரசன்னாவின் குற்றச்சாட்டுக்கு மின்வாரியத்தின் விளக்கம்!

  • IndiaGlitz, [Wednesday,June 03 2020]

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் கணக்கெடுப்பு குறித்து நடிகர் பிரச்சன்னா பதிவு செய்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. அவர் ''இந்தக் கோவிட் லாக்டவுனுக்கு மத்தியில் தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு கொள்ளையடிக்கும் செயலில் உற்சாகமாக ஈடுபட்டிருப்பதாக உங்களில் எத்தனை பேர் நினைக்கிறீர்கள்..?'' என தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் நடிகர் பிரசன்னாவின் வீட்டில் மீண்டும் மின் கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்றும், தவறுகள் இருந்தால் திருத்தப்படும் என்றும் மின்வாரியம் ஏற்கனவே பதில் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது நடிகர் பிரசன்னாவின் குற்றச்சாட்டுக்கு மின்வாரியம் பதில் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையே மின்கட்டணம் கணக்கிடப்படுகிறது என்றும், நான்கு மாத மின்நுகர்வை இரண்டாக பிரித்து மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது என்றும் மின்வாரியம் பதில் அளித்துள்ளது. மேலும் நடிகர் பிரசன்னா மின்வாரியத்தை கடுஞ்சொற்களால் குற்றஞ்சாட்டுவது கண்டிக்கத்தக்கது என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது. மின்வாரியத்தின் இந்த பதிலுக்கு பிரசன்னா என்ன விளக்கம் அளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

கவுண்டமணியை தற்செயலாக சந்தித்து புகைப்படம் எடுத்த கிரிக்கெட் வீரர்

காமெடி அரசர் கவுண்டமணி நடிக்காத படமே ஒரு காலத்தில் இல்லை என்ற நிலையில் ஒரு காலத்தில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வந்தார் கவுண்டமணி.

ஜார்ஜ் ஃப்ளாயிட்டுக்கு என்ன நடந்தது??? பரபரப்பு ஏற்படுத்திய வீடியோவை வெளியிட்ட சிறுமி யார்!!! விரிவான தொகுப்பு!!!

கடந்த மே 25 ஆம் தேதி அமெரிக்காவின் மிணசோட்டா மாகாணம் மினியா காவல் நிலைய பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தற்போது உலக மக்களிடையே இனவெறி குறித்த கருத்துகளை விவாதிக்க வைத்திருக்கிறது.

சென்னையில் புதிய உச்சத்தில் கொரோனா: ஒரே நாளில் 1000க்கும் மேல்!

தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக 1000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றும் 1000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

ஒரே படத்தில் விக்ரம்-துருவ் விக்ரம் இணைகின்றார்களா? ஆச்சரிய தகவல்

சியான் விக்ரம் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 'கோப்ரா' என்ற திரைப்படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

கர்ப்பிணி யானை கொல்லப்பட்டதற்கு பிரபல நடிகை கண்டனம்!

கேரளாவில் உள்ள பாலக்காடு பகுதியில் கர்ப்பிணி யானை ஒன்றுக்கு அன்னாசி பழத்தில் வெடிமருந்துகள் வைத்து சாப்பிட கொடுத்து கிராம மக்கள் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.